கொரோனாவை விட மோசமான வைரஸை ஆராய்ச்சி செய்து பயமுறுத்தும் சீனாக்காரன்.. நெஞ்சை பதற வைக்கும் விளைவுகள்

Ebola mutant virus: உலக சந்தையில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் முதலிடத்தில் இருக்க வேண்டும் என சீன நாடு நினைக்கிறது. இதற்காக தேவையில்லாத ஆராய்ச்சிகளில் ஈடுபட்டு தன்னாட்டு மக்களுக்கு கேடு விளைவிப்பது மட்டுமில்லாமல், ஒட்டு மொத்த உலகத்திற்கும் அச்சுறுத்தலாக இருக்கிறது.

கடந்த 2019 ஆம் ஆண்டு இறுதியில் சீன நாட்டில் பரவிய கொரோனா வைரஸ் உலகத்தையே உலுக்கியதை யாராலும் மறக்க முடியாது. என் நாட்டில் இறந்தவர்களை புதைப்பதற்கு இடமில்லாத அளவுக்கு எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என மீடியா முன் இத்தாலி பிரதமர் கண்ணீர் வடித்தார்.

பொருளாதாரத்தில் ஒரு படி முன்னேறி இருக்க வேண்டிய நாடுகள் எல்லாம் இந்த கொரோனா வைரசால் அடிமட்டத்திற்கு போய்விட்டன. தடுப்பூசிகளை கண்டுபிடித்து நோயை அடக்கி விட்டார்கள் என்று கடந்த ஒரு வருடமாக நிம்மதி பெருமூச்சு விட்டோம்.

இப்போ அந்த தடுப்பூசியிலும் பக்கவிளைவு இருக்குது என்று சொல்லி அதிர்ச்சியை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் சீனா மற்றும் ஒரு அதி தீவிர வைரஸை உருவாக்கிக் கொண்டிருக்கிறது. இது மட்டும் கொரோனா வைரஸ் போல் பரவ ஆரம்பித்தால் நோய் வந்த மனிதன் மூன்று நாட்களுக்குள் சாவது உறுதி என அறிவியல் அறிஞர்கள் தெரிவிக்கிறார்கள்.

சீனா ஆராய்ச்சி செய்ய காரணம்:

பண்றதெல்லாம் பண்ணிட்டு பச்சை பிள்ளை மாதிரி முழிக்கிறதுல சீனாக்காரன் அடிச்சுக்க யாரும் இல்ல. உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் வைரஸ் தான் எபோலா. இதன் தன்மையைப் பற்றி அறிந்து கொள்ள சீன நாடி இப்போது ஆராய்ச்சி செய்கிறது.

அதற்காக எபோலா வைரஸிலிருந்து கிடைக்கப்பட்ட ஒரு சில உதிரி பாகங்களை வைத்து அதே மாதிரியான ஒரு செயற்கை வைரஸை உருவாக்கி விட்டனர். எபோலா வைரஸை பற்றி தெரிந்து கொள்ளத்தான் இந்த ஆராய்ச்சி என சீன நாடு தரப்பிலிருந்து சொல்லப்படுகிறது.

செயல் இழக்கும் உடல் பாகங்கள்

சீன நாட்டு அறிவியல் அறிஞர்கள் உருவாக்கிய அந்த செயற்கை வைரஸை ஊசிகள் மூலம் ஐந்து ஆண் வெள்ளை எலிகள் மற்றும் ஐந்து பெண் வெள்ளை எலிகளுக்கு செலுத்தி இருக்கிறார்கள். இந்த வைரஸ் அந்த எலிகளிடையே எபோலா நோயாளிகளுக்கு உருவாக்கும் அத்தனை அறிகுறிகளையும் ஏற்படுத்தி இருக்கிறது. அது மட்டும் இல்லாமல் ஒட்டுமொத்த உடல் உறுப்புகளும் செயலிழந்து மூன்று நாட்களுக்குள் அந்த எலிகள் உயிரிழந்திருக்கின்றன. இதில் சிலவற்றிற்கு கண்களில் சுரப்பு ஏற்பட்டு கண்பார்வையே பாதிக்கப்பட்டிருக்கிறது.

நெஞ்சை பதற வைக்கும் விளைவுகள்

உலகை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் எபோலா வைரஸிற்கு தடுப்பூசி கண்டுபிடிக்க இந்த ஆராய்ச்சி நடத்தப்படுகிறது. இருந்தாலும் பாதுகாப்பற்ற ஒரு சூழலில் இந்த வைரஸ் வெளியேறிவிட்டால் அதன் பின்னர் நடக்கப் போகும் விளைவுகளை யாராலும் தடுக்க முடியாது. மனிதனே நடமாடாத குகையில் வாழ்ந்த வவ்வால்களை பிடித்து வந்து ஆராய்ச்சி செய்ததில் தான் கொரோனா வைரஸ் வெளியாகி உலகத்தையே அச்சுறுத்தியது. அதேபோன்று இந்த எபோலா வைரஸ் மற்றும் வெளியேறினால் உலகமே இருக்காது என்பதுதான் நிதர்சனமான உண்மை.

Next Story

- Advertisement -