காதல் கணவரை தொகுப்பாளினி பிரிவதற்கு காரணமான கள்ளக்காதலன்.. காமெடியன் செய்த வில்லத்தனம்

Gossip: பல வருடங்களாகவே விஜேவாக இருந்து கொடிகட்டி பறக்கும் பிரபல தொகுப்பாளினி, தன்னுடைய காதலனை ஆசை ஆசையாக திருமணம் செய்து கொண்டார். ஒரு சில வருடங்களிலேயே கணவரைப் பிரிந்து இப்போது அம்மா மற்றும் அவருடைய சகோதரர் வீட்டில் வாழ்ந்து வருகிறார்.

ஆனால் தொகுப்பாளினி எதற்காக தன்னுடைய ஆசை கணவரை விட்டு பிரிந்தார் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. ஆனால் இந்த தம்பதியருக்கிடையே ஒரு காமெடி நடிகர் தான் கும்மி அடித்து விட்டு சென்றிருக்கிறார். எல்லோருடனும் ஜாலியாக பேசக்கூடிய அந்த தொகுப்பாளியின், ‘தம்பி! தம்பி!’ என்று காமெடி நடிகருடன் நெருங்கி பழகி இருக்கிறார்.

அதுவே பின்னாளில் கள்ளக்காதலாகவும் மாறி இருக்கிறது. இந்த விஷயம் கணவருக்கு தெரிய வர இருவரும் பிரிந்து விட்டனர். சமீபத்தில் அந்தக் காமெடி நடிகரும் தொகுப்பாளினை கழட்டி விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.

‘அரசன நம்பி புருஷனை விட்ட கதையா!’ அந்த தொகுப்பாளினி இப்போது காமெடியனின் வில்லத்தனத்தால் நட்டாற்றில் நிற்கதியாய் நிற்கிறார். இப்ப அந்த தொகுப்பாளினிக்கு அவருடைய அம்மாவும் தம்பியும் தான் முழு சப்போர்ட்டாக நிற்கின்றனர்.

ஆனால் இந்த விஷயம் தெரிந்த பலரும், ‘சினிமாவில் இதெல்லாம் சகஜமப்பா!’ என்று அவரவர் தங்கள் வேலைகளை பார்த்துக் கொண்டிருக்கின்றனர். அதோடு காமெடியனும் அந்தத் தொகுப்பாளினிடம் வேண்டியது கிடைத்த பிறகு, கை கழுவி விட்டு இப்போது தன்னுடைய மனைவியுடன் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →