ஆசை காட்டி மோசம் செய்த கணவன்.. வயிற்றுப் பிழைப்புக்காக அந்தரங்க தொழில் செய்த அவலம்

ஒரு காலகட்டத்தில் பல படங்களில் நடித்து பிரபலமாக வலம் வந்து கொண்டிருந்தார் நடிகை ஒருவர். மலையாளம் தான் அவரது சொந்த மொழியாக இருந்தாலும் தமிழில் தான் நிறைய ஹிட் படங்கள் கொடுத்து வந்தார். இதனால் பெரிய நடிகர்களின் பட வாய்ப்பு அடுத்தடுத்து நடிகைக்கு கிடைக்க தொடங்கியது.

இவ்வாறு தமிழ் சினிமாவில் நடிகை கோலோச்சி இருந்த சமயத்தில் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் நடிகையின் கணவர் அவருடைய பணத்தை தான் விரும்பி உள்ளார். இதனால் அவ்வப்போது பொய் சொல்லி நடிகையிடம் பணத்தை கரந்துள்ளார்.

அதுமட்டுமின்றி மனைவி இருக்கும் போதே வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பில் இருந்துள்ளார். கடைசியில் நடிகையின் பணத்தையும் சுருட்டி கொண்டு வேறு ஒருவருடன் ஓடிவிட்டார். நடிகையோ கணவரை நம்பி தன்னிடம் இருந்த அனைத்து சொத்துக்களையும் இழந்து விட்டார்.

மேலும் பட வாய்ப்புகளும் வராததால் வயிற்றுப் பிழப்புக்கு என்ன செய்வது என்று தெரியாமல் அந்தரங்க தொழில் செய்துள்ளார். இதனால் போலீசாரால் கைதும் செய்யப்பட்டேன் என்று அவரே ஒப்புக்கொண்டார். சினிமாவை பொறுத்தவரையில் சில நடிகைகள் அந்தரங்க தொழில் செய்து வரும் செய்திகள் வெளியாகி உள்ளது.

ஆனால் சில நிர்பந்தத்தால் அந்த நடிகைகள் அவ்வாறு செய்து வரும் நிலையில் பிரபல நடிகையாக இருந்த இவர் கணவரை நம்பி மோசம் போய் உள்ளார். அதுமட்டுமின்றி மோசமான தொழிலுக்கும் தள்ளப்பட்டு பல பிரச்சனைகளை சந்தித்து இருக்கிறார். ஒரு திருமணம் நடிகையின் வாழ்க்கையை புரட்டி போட்டு இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →