சினிமா செய்திகள்

பிள்ளைய பெத்து போட்டுட்டு கள்ளக்காதலுடன் ஓடிய நடிகை.. அடுத்தடுத்து நடந்த மூன்று திருமணம்

By Arun · 07 ஆக 2023 · Updated 08 மார்ச் 2026
gossip

70களில் தமிழ் சினிமாவை ஒரு கலக்கு கலக்கிய நடிகை ஒருவர், 80களில் முக்கியமான நிறைய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தார். அது மட்டுமல்ல தமிழ் திரைப்பட நடிகையாக இருந்த இவர், பின்னாளில்  தொலைக்காட்சி தொகுப்பாளராகவும் மாறினார்.

பின்பு ஒரு படத்தையும் இயக்கி வெளியிட்ட இவர், நடிப்பதோவது சமூகப் பிரச்சினைகளை அலசும்  திரைப்படங்களை தயாரிக்கவும் செய்தார். இவ்வாறு தமிழ் சினிமாவின் சிறந்த நடிகையாக விளங்கிய இவருடைய  தனிப்பட்ட வாழ்க்கை சர்ச்சைக்குரியதாகவே இருந்துள்ளது. 

இவர் அடுத்தடுத்து மூன்று பேரை திருமணம் செய்து கொண்டார். முதலில் உச்ச நடிகையாக இருந்த போது, வீட்டில் வலுக்கட்டாயமாக ஒருவரை பார்த்து திருமணம் செய்து வைத்தனர். ஆனால் அந்த சமயத்தில் நடிகை வேறு ஒருவரை காதலித்து வந்தார். ஆனால் குடும்பத்தை எதிர்த்து எதுவும் செய்ய முடியாமல் இருந்த நிலையில், முதல் கணவரின் குழந்தையை அந்த நடிகை வயிற்றில் சுமந்து கொண்டிருந்தார்.

அதனால் பிள்ளையை பெற்று கொடுத்து விட்டு வீட்டை விட்டு வெளியேறி தன்னுடைய காதலனை இரண்டாவது திருமணம் செய்து கொண்டார். அந்த நடிகை அவருடனும் சந்தோஷமாக சில வருடங்கள் மட்டுமே வாழ்ந்து, அவருக்கும் டாட்டா காட்டிவிட்டார். பின்பு மூன்றாவதாக வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்ட நடிகை அவரையும் விட்டுப் பிரிந்தார். 

இப்போது அவருடன் யாருமே இல்லை மகளுடன் தன்  அப்பாவிற்கு சொந்தமான அடுக்கு மாடியில் வசித்து வருகிறார். ஊருக்கு உபதேசம்  செய்து கொண்டு செம போல்டாக இருந்த இந்த நடிகை, தன்னுடைய தனிப்பட்ட வாழ்க்கை  சரியாக அமைத்துக் கொள்ள தவறிவிட்டார்.