அப்பாவி இளைஞனுக்கு ஆசை காட்டி வளைத்துப் போட்ட நடிகை.. டார்ச்சரால் தற்கொலை செய்து கொண்ட கொடுமை

Gossip News: சினிமாவில் ரொம்பவும் அழகானவர் என பெயர் பெற்ற நடிகை இவர். திருமணம் ஆகியும் ஹீரோயினாக நடித்துக் கொண்டிருந்த இவருக்கு, எல்லாமே வெற்றி படங்களாக தான் அமைந்திருக்கிறது. நடிகை எந்த அளவுக்கு திறமைசாலியோ அதே அளவுக்கு கோபத்தையும் அதிகமாக காட்டக்கூடியவர். இதனால் இவரிடம் எல்லோரும் கொஞ்சம் அடங்கித்தான் போவார்கள்.

பெயர் மற்றும் புகழுக்காக சினிமாவில் நடித்தாலும் தன் பெயரில் எந்த ஒரு கிசுகிசுவும் வந்துவிடக் கூடாது என்பதில் ரொம்பவும் ஜாக்கிரதையாக இருந்திருக்கிறார் இந்த நடிகை. இதனாலேயே படப்பிடிப்பு தளங்களிலும், மற்ற வெளியிடங்களிலும் ரொம்பவும் உஷாராக நடந்து கொள்வாராம் இந்த அழகான நடிகை.

அப்படி இருக்கும் பட்சத்தில் ஒரு நாள் அவுட்டோர் படப்பிடிப்பில் கலந்து கொள்ள சென்றிருந்த இவர், அங்கு ஆபீசில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு சிறிய வயது இளைஞனை பார்த்து அவர் மீது காதல் கொண்டிருக்கிறார். அந்த அப்பாவி இளைஞனையும் தன்னுடைய அழகை வைத்து மயக்கி இருக்கிறார் இந்த நடிகை. இளைஞனும் நடிகையைப் பற்றி முழு உண்மையும் தெரியாமல் காதலில் விழுந்திருக்கிறார்.

போன இடத்தில் அழகான இளைஞனை பார்த்த மயக்கத்தில் இந்த நடிகை அவனை அடைந்தும் இருக்கிறார். ஆனால் இளைஞனிடம் இது பற்றி வெளியில் சொல்லவே கூடாது என மிரட்டி இருக்கிறார். இது போன்ற விஷயம் வெளியில் தெரிந்தால் தன்னுடைய சொந்த வாழ்க்கை மற்றும் சினிமா வாழ்க்கை இரண்டுமே பாதிக்கப்பட்டு விடும் என்பதால் இப்படி ஒரு நிபந்தனையை போட்டு இருக்கிறார்.

ஆனால் இப்படி ஒரு அழகான நடிகையை தான் அடைந்ததை பெரிய மகிழ்ச்சியான விஷயமாக நினைத்துக் கொண்ட இளைஞன் இந்த விஷயத்தை வெளியில் சொல்லிவிட்டார். அதனால் அந்த நடிகை இளைஞனை நேரில் கூப்பிட்டு மிரட்டி இருக்கிறார். நடிகையின் இந்த டார்ச்சர் தாங்காமல் ஒரு கட்டத்தில் அந்த இளைஞன் தற்கொலை செய்து கொண்டிருக்கிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →