குடும்பத்தில் கும்மியடித்த நபர்.. நடிகையின் வாழ்க்கையை நாசமாக நடந்த சதி

பிரபல நடிகை சினிமாவுக்கு வந்த புதிதிலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடிக்க ஆரம்பித்தார். மிகவும் துணிச்சலான நடிகை சினிமாவில் ஒரு சில நடிகர்களுடன் கிசுகிசுக்கப்பட்டார். அதுவும் தன்னைவிட வயதில் மூத்த நடிகர்களின் பெயர்கள் உடன் இந்த நடிகையின் பெயர் கிசுகிசுக்கப்பட்டு செய்தித்தாளில் வெளியானது.

ஆனால் எதற்கும் அஞ்சாத அந்த நடிகை சினிமாவில் அடுத்தடுத்த படங்களில் நடித்து வந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் தமிழ் சினிமாவில் வாய்ப்பு குறைந்ததால் அக்கடதேச மொழி படங்களில் ஆர்வம் செலுத்தி வந்தார். அங்கும் நடிகைக்கு ஓரளவு நல்ல பெரும் புகழும் கிடைத்தது. அதன் பிறகு சினிமாவுக்கு முழுக்கு போட்டுவிட்டு தொழிலதிபரை திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகிவிட்டார்.

இப்போது இந்த தம்பதியினருக்கு ஒரு குழந்தை இருக்கிறது. இவ்வாறு அழகாக போய்க் கொண்டிருந்த இவர்களது குடும்பத்தில் கும்மியடிக்க ஒரு நபர் சூழ்ச்சி செய்துள்ளார். அதாவது நடிகையின் கணவர் வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பில் இருக்கிறார் என்றும் அதனால் இருவருக்கும் விரைவில் விவாகரத்து ஆக உள்ளதாக செய்தியை பரப்பி விட்டுள்ளார்.

இந்த செய்தி இணையத்தில் காட்டுத் தீயாய் பரவ ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மேலும் திருமணமான சில வருடங்களிலேயே நடிகை விவாகரத்து செய்யப் போகிறாரா என அவரது ரசிகர்கள் வேதனை வெளிப்படுத்தி வந்தனர். அதன்பிறகு தான் விஷயம் நடிகைகே தெரிந்து உள்ளது.

என்னது எனக்கு விவாகரத்தா என்று பதறிப் போன நடிகை, உடனடியாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் யாரோ இவ்வாறு வேண்டுமென்றே வதந்தியை கிளப்பி விட்டுள்ளதாக பதிவிட்டிருந்தார். அதுமட்டுமின்றி நான் கணவர், குடும்பம் என சந்தோஷமாக வாழ்வதாக கூறியிருக்கிறார். இவ்வாறு நடிகையின் வாழ்க்கையை நாசமாக யாரோ சதி செய்து இருக்கிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →