இந்த 5 காரணங்களால்தான் 75 வயதிலும் ரஜினி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.. யாரும் நெருங்க முடியாத உச்சம்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 50 ஆண்டுகள் நீண்ட திரையுலக பயணம்.
2025-ல் வெளியான கூலி படம், அவரது நிலையான கவர்ச்சி மற்றும் மகத்துவத்தை மீண்டும் நிரூபித்தது. இதைப்பற்றி நாம் இங்கு பார்க்கலாம்.

 75 வயதிலும் ரஜினியின் ஆற்றல் குறையவில்லை என்பதை கூலி  படத்தில் காண முடிந்தது.கூலி ஆடியோ லாஞ்ச் நிகழ்ச்சியில் ஸ்கிரிப்ட் இல்லாமல் 45 நிமிடம் பேசினார். அந்த நகைச்சுவை, ஆற்றல் பல ஸ்டாண்ட்-அப் காமெடியன் களையும் மிஞ்சியது என்றே கூறலாம்.

கேமரா முன் நடிக்கும் போது  கேமரா யாரையும் பொய் பேச விடாது என்ற உண்மையை கூலி படத்தில் அவர் காட்டிய உடல் மொழி, உழைப்பு, பக்குவம் அனைத்தும் அதற்குச் சான்று. ஒரு நடிகர் கலைக்கும், பார்வையாளருக்கும் அவர் கொண்ட மரியாதையை இதனால் உணரலாம்.

 திரையுலகம் கலை மட்டுமல்ல, வணிகமும் என்பதை ரஜினி தெளிவாக புரிந்தவர். தனது படங்களை அதிகம் ப்ரோமோஷன் செய்து பார்வையாளரிடம் கொண்டு செல்வார். அவரது அனுபவம், தொலைநோக்கு பார்வை ஆகியவை இளம் தலைமுறைக்கும் பாடமாகும். இதன் மூலம் அவரது வணிக நுண்ணறிவை அறியலாம்.

கைதி” படத்திற்குப் பிறகு, இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு அவர் காட்டிய மரியாதையையும், அவரது படத்தில் பங்கேற்க விரும்புவதையும் பாராட்டுக்குரியது. இதனால் 75 வயதிலும், அவரது படங்கள் முதல் நாளே கோடிகள் சம்பாதிக்கும் என்பதை வலியுறுத்துகிறது.

திரைக்கு வெளியே, சாதாரண உடையில், எளிய மனிதராக வாழ்பவர் ரஜினி. “வேலை தான் அடையாளம், மனிதன் தனி அடையாளம் வேண்டும்” என்பதே அவர் செய்தி. இது அவரது ஆளுமைக்கு மேலும் உயர்வு தருகிறது.

 திரையில் அதிரடி ஹீரோ, வெளியே எளிய மனிதர் இதுவே ரஜினியின் தனிச்சிறப்பு. அவரது 50 ஆண்டு பயணம், ரசிகர்களின் அன்பும், அவருடைய உழைப்பும் சேர்ந்த கலவையே. அதனால் தான் ரஜினிகாந்த் என்ற பெயர் “சூப்பர் ஸ்டார்” என்று என்றென்றும் ஒலிக்கிறது

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →