4 பேரும் நடிப்பில் வாழ்ந்த படம்.. அந்த மாதிரிபடங்களுக்கு வித்தாய் அமைந்த புதிய பறவை

தமிழ் சினிமாவிலேயே தனி இடம் பிடித்த படம் புதிய பறவை. இப்படத்தில் சிவாஜி கணேசன், சரோஜாதேவி, சௌகார்ஜானகி, எம் ஆர் ராதா ஆகியோர் நடித்திருந்தனர். இப்படத்தை மிகுந்த பொருட்செலவில் சிவாஜி கணேசன் தயாரித்திருந்தார்.

புதிய பறவை படத்தை எத்தனை முறை பார்த்தாலும் முதல் முதலில் பார்க்கும் அதே விறுவிறுப்புடன் படத்தின் கதை அமைந்து இருக்கும். இப்படத்தில் இறந்த மனைவி மீண்டும் கணவன் கண் முன் வந்தால் அவனின் நிலை என்ன என்பதே புதிய பறவை. இது தமிழில் வந்த ஒரு பெஸ்ட் இன்வெஸ்டிகேஷன் மூவியாக அமைந்தது.

வருங்காலத்தில் படம் எடுத்தால் இந்த மாதிரி ஒரு இன்வெஸ்டிகேஷன் மூவி எடுக்க வேண்டும் என பல இயக்குனர்களுக்கு கற்றுத் தந்த படம் புதிய பறவை. சிவாஜியின் நடிப்புக்கு சரியான தீனி கிடைத்த படம் என்றால் அது புதிய பறவை தான்.

அதேபோல் சிவாஜிக்கு இணையான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார் சௌகார் ஜானகி. எம் ஆர் ராதாவும் நடிப்பில் மிரட்டியிருப்பார். சரோஜாதேவி கொள்ளை அழகுடன் மிகச்சிறந்த நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். புதிய பறவை படத்தில் கதாநாயகன் கொலைகாரனா என முதலில் ரசிகர்கள் இப்படத்தை பார்க்க மறுத்தனர்.

அதன் பிறகு இப்படத்தின் திரைக்கதையின் நுட்பத்தை புரிந்து கொண்ட பல ரசிகர்களும் பார்த்து படத்தை வெற்றியடையச் செய்தனர். புதிய பறவை படத்திற்கு விஸ்வநாதன், ராமமூர்த்தி இசை அமைத்திருந்தனர். இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் நல்ல வரவேற்ப்பை பெற்றது.

இன்றைய இளம் நடிகர் நடிகைகளுக்கு புதிய பறவை படம் எடுத்துக் காட்டாக உள்ளது. இந்தப் படத்தை தற்போது ரீமேக் செய்தால் நடிப்பதற்கு ஆளே கிடையாது. அந்த அளவுக்கு சிவாஜிகணேசன், சரோஜாதேவி, சௌகார்ஜானகி, எம் ஆர் ராதா ஆகிய நால்வரும் புதிய பறவை படத்தில் மொத்த நடிப்பையும் வெளிப்படுத்தி இருந்தனர் .

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →