அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்திருக்கு.. ஹீரோயினுடன் கையும் களவுமாக மாட்டிய வாரிசு நடிகர்

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரை வரை தன்னுடன் நடித்த நடிகை மீது காதல் வயப்பட்டு திருமணம் செய்தவர்கள் பலர் உண்டு. அந்த வகையில் தற்போது வாரிசு நடிகராக சினிமாவில் நுழைந்த ஒரு நடிகர் தனக்கு ஜோடியாக ஒன்று இரண்டு படங்களில் நடித்த நடிகை மீது காதலில் விழுந்துள்ளார்.

வாரிசு நடிகர் என்பதால் இவருக்கு சுலபமாக வாய்ப்பு கிடைத்தாலும் ஒரு ஹீரோவுக்கான அந்தஸ்தை பெற முடியாமல் தற்போது வரை தவிர்த்து வருகிறார். அவரது தந்தை போல இவரால் பெயர் எடுக்க முடியவில்லை. ஆனாலும் தற்போது ஒரு சில படங்களில் கமிட் ஆகி நடித்த வருகிறார்.

இந்நிலையில் ஒரு நடிகை உடன் கிசுகிசுக்கப்பட்டு வந்தார் வாரிசு நடிகர். ஆரம்பத்தில் அந்த நடிகை நாங்கள் நட்பாக தான் பழகி வருகிறோம் என்று ஊடகங்களில் பேட்டி கொடுத்திருந்தார். ஆனாலும் அந்த நடிகையின் பர்த்டே பார்ட்டியை கொண்டாடுவது எங்கு சென்றாலும் போவது என அந்த நடிகையின் பின்னாலே சென்று கொண்டிருந்தார் வாரிசு நடிகர்.

தற்போது ஒரு நிச்சயதார்த்த விழாவில் இவர்கள் ஜோடியாக கலந்து கொண்ட புகைப்படம் இணையத்தில் வெளியாகி இருந்தது. இதை பார்த்து இவர்களது காதல் கன்ஃபார்ம் என ரசிகர்கள் உறுதி செய்து விட்டார்கள். இதுவரை ஊரை ஏமாற்றிக் கொண்டிருந்த இந்த ஜோடி தற்போது கையும் களவுமாக மாட்டி உள்ளனர்.

இவ்வளவு நாள் இந்த ஜோடி காதலை மறைத்து வைத்தாலும் இந்த ஒரு போட்டோவ தற்போது வெட்ட வெளிச்சமாகி உள்ளது. மேலும் இரு விட்டாலும் பச்சைக்கொடி காட்டியதால் விரைவில் இவர்களுக்கு திருமணம் நடக்கும் என்று கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்ட வருகிறது.

வாரிசு நடிகரின் தந்தையும் தனது அறிமுகமான படத்தில் நடித்த நடிகையை காதலித்த திருமணம் செய்து கொண்டார். தற்போது அப்பனுக்கு பிள்ளை தப்பாம பிறந்தது போல மகனும் தன்னுடன் நடித்த நடிகையை மனம் முடிக்க உள்ளார். மேலும் தற்போது கோடம்பாக்கத்தில் இவர்களது செய்தி தான் ஹாட் டாபிக்காக பேசப்பட்டு வருகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →