200 கோடி இன்சூரன்ஸ் பணத்திற்கு ஆசைப்பட்ட கணவன்.. நடிகையை போட்டு தள்ளிய தயாரிப்பாளர்

80-களில் இளசுகளின் எவர்கிரீன் நடிகையாக இருந்தவர் திடீரென்று அவரை சுற்றிய இளம் ஹீரோக்களை எல்லாம் கழட்டிவிட்டு மூத்த தயாரிப்பாளரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஏற்கனவே திருமணம் ஆகி விவாகரத்து பெற்ற அந்த தயாரிப்பாளருக்கு இந்த நடிகை இரண்டாவது மனைவி.

தயாரிப்பாளருக்கு அந்த நடிகையின் வயதில் ஒரு பெண் கூட இருந்தார். இருப்பினும் திருமணத்திற்கு முன்பே லிவிங் டுகெதரில் வாழ்ந்த அந்த நடிகை கர்ப்பமானதால் அவசர அவசரமாக அடம் பிடித்து அந்த தயாரிப்பாளரை திருமணம் செய்து கொண்டார்.

இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருந்த நிலையில், திடீரென்று வெளிநாட்டில் திருமண நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க சென்றபோது அந்த நடிகை பாத்ரூமில் வழுக்கி விழுந்து உயிரிழந்ததாக அதிர்ச்சியான தகவல் வெளியானது. ஆனால் இது கொஞ்சம் கூட நம்புவதாக இல்லை என பலரும் சந்தேகித்த நிலையில், தற்போது அந்த நடிகையின் குடும்ப நண்பரும் அரசியல் மற்றும் சினிமா விமர்சகர்மான பிரபல டாக்டர் ஒருவர் சமீபத்திய பேட்டி ஒன்று நடிகையின் மர்ம மரணத்தை குறித்த பல உண்மைகளை புட்டு புட்டு வைத்தார்.

அந்த நடிகை பாத் டப்பில் விழுந்து இறந்து விட்டார் என சொல்வது அப்பட்டமான பொய். அந்த தயாரிப்பாளர் நடிகையை திருமணம் செய்து கொண்டதற்கு முக்கிய காரணமே பணம்தான். அதேபோல் அவரின் மரணத்திற்கும் பணம்தான் காரணமாக இருந்தது. ஏனென்றால் நடிகையின் பெயரில் ரூபாய் 200 கோடி இன்சூரன்ஸ் இருந்ததால், அவரை கணவரே போட்டுத் தள்ளி விட்டார்.

அந்த தயாரிப்பாளர் மிகப்பெரிய செல்வாக்கு படைத்தவர் என்பதால் அவருக்கு அரசியலில் பெரும்புள்ளியாக இருக்கக்கூடியவருடன் நெருக்கமானவராக இருந்ததால் இந்த கொலையில் இருந்து ஈஸியாக தப்பித்து விட்டார். அது மட்டுமல்ல அந்த நடிகை என்ன தியாகம் செஞ்சாங்கன்னு அவருக்கு இறுதியில் தேசியக் கொடியை போர்த்தினாங்கன்னு தெரியலை என்று அந்த நடிகையின் குடும்ப நண்பர் சமீபத்திய பேட்டியில் உண்மையை உடைத்துச் சொன்னார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →