சீரியலில் கதாநாயகி உடன் ஏற்பட்ட அந்தரங்க உறவு.. மனைவியை துரத்தி விட்டு கூத்தடிக்கும் கதாநாயகன்

Gossip: சீரியலில் ஒன்றாக நடிக்கும் வாய்ப்பு ஏற்பட்டதும் தனக்கு கல்யாணம் ஆனதை மறந்து அதில் நடித்த கதாநாயகன் கூத்தடித்துக் கொண்டு வருகிறார். ஏதோ காதும் காதுமாய் வைத்து முடித்து விடலாம் என்று நினைத்த அந்த ஹீரோ கடைசியில் வெட்ட வெளிச்சமாக அனைத்தும் அம்பலமாகிவிட்டது.

அதாவது ஆசை ஆசையாக காதலித்த தன் மனைவியை கர்ப்பமாக ஆக்கிவிட்டு, தன்னுடன் சீரியல் நடிக்கும் கதாநாயகி உடன் மோகத்தில் விழுந்திருக்கிறார். இவர்கள் என்னதான் மறைத்து பண்ண வேண்டும் என்று நினைத்தாலும் சில விஷயங்களால் அது வெளிவந்து விட்டது.

பிறகு அந்த கதாநாயகனின் மனைவியும் தன்னுடைய கணவர் முன்மாதிரி தன்னுடன் பழகுவதும் இல்லை, பேசுவதும் இல்லை என்று சந்தேகப்பட்டு இருக்கிறார். பிறகு சூட்டிங் ஸ்பாட்டுக்கு போய் பார்த்தால் கணவர் அந்த நாடகத்தில் நடிக்கும் கதாநாயகி உடன் ரொம்பவே நெருக்கமாக இருப்பதை பார்த்திருக்கிறார்.

இதை அந்த இடத்திலேயே தட்டி கேட்ட மனைவியை கொஞ்சம் கூட ஈவு இரக்கமே இல்லாமல் இரண்டு பேரும் சேர்த்து துன்புறுத்திருக்கிறார்கள். இதனால் படப்பிடிப்பில் இருந்த அனைவரும் வேடிக்கை பார்க்கும் அளவிற்கு போய்விட்டது. அத்துடன் இவர்களுடைய சங்கதி அனைத்து சோசியல் மீடியாவிலும் பரவ ஆரம்பித்து விட்டது.

இதனால் இந்த நாடகத்தில் வில்லி கதாபாத்திரத்தில் நடித்த இன்னொரு நடிகை இதற்கு மேலும் இதில் தொடர்ந்து நாம் நடித்தால் நம்முடைய பெயரும் கெட்டுவிடும். அதனால் தன்னுடைய சொந்த காரணத்திற்காக என்னால் இந்த நாடகத்தில் தொடர்ந்து நடிக்க முடியாது என்று சொல்லி விலகி விட்டார். ஒரு விதத்தில் இந்த நடிகை எடுத்த முடிவும் சரிதான்.

ஏனென்றால் இன்னும் அந்த நாடகம் தொடர்ந்து கொண்டே வருகிறது. அத்துடன் இதில் நடிக்கும் கதாநாயகன் மற்றும் கதாநாயகியின் லீலைகளும் கொஞ்சம் கூட நிற்காமல் போய்க்கொண்டே தான் இருக்கிறது. கடைசியில் இவருடைய மனைவி தான் பாவம் கணவரின் உறவே வேண்டாம் என்று பெற்ற குழந்தையுடன் தனியாக வாழ்ந்து வருகிறார்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →