Ajith : அனைவரும் ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருந்த “குட் பேட் அக்லி” திரைப்படம் ரிலீஸாகி எதிர்பார்த்ததை விட நல்ல வெற்றியை கொடுத்தது. தற்போது அடுத்த படத்தில் அஜித்துடன் இணையும் புதிய நடிகை யார் தெரியுமா..?
வெற்றி பயணம்!
இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம் வெளியிடப்பட்ட அஜித் மற்றும் த்ரிஷாவின் விடாமுயற்சி திரைப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இப்படத்துக்கு எதிரான பல மீம்ஸ்களும் வலைதளங்களில் உலாவி வந்தது.
விடாமுயற்சி படத்தை தொடர்ந்து ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் வெளியான “குட் பேட் அக்லி” ஒரு நல்ல வெற்றியை கொடுத்தது. இது இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரனுக்கு முதல் படம் மாதிரியே தெரியாத அளவுக்கு படம் ஹிட் அடித்தது. எதிர்பார்த்ததை விட படம் வசூலில் கொட்டி தீர்த்தது.
ஒரு வழியாக படத்தை முடித்து விட்டு ஹிட்டும் கொடுத்துவிட்டு தல அஜித், தனது கார் ரேசில் களமிறங்கி விட்டார்.
மீண்டும் ஒரு படம்!
தற்போது அஜித் புதிய திரைப்படத்தில் நடிக்க இருப்பதாக சினிமா வட்டாரத்தில் தகவல் வந்துள்ளது. அதுவும் “குட் பேட் அக்லி” படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இந்த முறை அஜித்துடன் மீண்டும் இணைந்துள்ளார்.
அஜித் நடிக்கும் புதிய திரைப்படத்தில் முதலில் நயன்தாரா கமிட்டாகி இருந்தார். சில காரணங்களால் நயன்தாரா விலகி விட்டார்
டிரெண்டிங் நடிகை!
தமிழ், கன்னடா, தெலுங்கு, மலையாளம், ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியான கேஜிஎப் திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி ஒரே படத்தில் நடித்து பிரபலமானார்.
அதன்பின் பிரபல நடிகர் நானியுடன் இணைந்து “The Third Case” என்ற தெலுங்கு திரைப்படத்தில் ஹீரோயினாக நடித்து திரையுலகில் மேலும் பிரபலமானார்.
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் நயன்தாரா அஜித்துடன் நடிக்க இருந்த திரைப்படத்தில் நடிகை ஸ்ரீநிதி ஷெட்டி நடிக்க இருப்பதாக தற்போது தகவல் வெளியானது.