அருண் விஜய்க்கு பதில் வில்லனாக களமிறங்கும் ஹீரோ.. சிரிப்பு மூட்டும் செட்டாகாத முகம்

தல அஜித் நடிப்பில் 2015ஆம் ஆண்டு வெளியான என்னை அறிந்தால் படத்தில் விக்டர் கதாபாத்திரத்தில் வில்லனாக நடித்ததின் மூலம் அருண் விஜய் மிரட்டிய பிறகு அவருடைய ரேஞ் வேறு லெவலுக்கு சென்றது. இந்தப் படத்திற்குப் பிறகு அருண் விஜய்க்கு வில்லனாக நடிக்கும் வாய்ப்புகள் குவியத் துவங்கியது.

ஆனால் இவர் ஹீரோவாக நடிக்கவே விருப்படுவதால் அதை ஏற்க மறுக்கிறார். ஆனால் தற்போது இயக்குனர் வெங்கட்பிரபு தெலுங்கில் நாக சைதன்யா வைத்து இயக்கி வரும் படத்தில் அருண் விஜய் நடிக்க கமிட் ஆனார்.

பிறகு அதில் நடிக்க விருப்பமில்லாமல் விலகி இருக்கிறார். தற்போது அருண் விஜய்க்கு பதில் தமிழ் கதாநாயகன் ஒருவர் வில்லனாக நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். தெலுங்கு படத்தில் இவர் நடிக்கும் முதல் படம் இதுதான். இந்தப் படத்தில் கதாநாயகியாக கீர்த்தி சுரேஷ் நடிக்கிறார்.

பொதுவாக இவரை தமிழ் படத்திலேயே வில்லனாக ஒத்துக் கொள்ள மாட்டார்கள். அப்படி இருக்கும்போது தெலுங்கில் நாக சைதன்யாவிற்கு வில்லனாக நடிக்க ஜீவா முடிவெடுத்திருக்கிறார். ஜீவாவும் தமிழ்சினிமாவில் சூப்பர் ஹிட் படங்களை கொடுத்தவர்.

இவரைப் பார்த்தால் ரசிகர்கள் பலருக்கும் சிவா மனசுல சக்தி படத்தில் ‘மாமா ஒரு குவாட்டர் சொல்லு’ என்ற டயலாக் தன் நியாபகம் வந்து சிரிப்பு மூட்டும் முகமாகவே தெரியும். அப்படிப்பட்ட இவரை தெலுங்கில் வில்லனாக காண்பித்து காமெடியாக போகின்றனர் என்றும் ஜீவாவின் முடிவுக்கு நெட்டிசன்கள் கிண்டல் எடுக்கின்றனர்.

கடந்த சில வருடங்களாக ஜீவாவுக்கு ஹீரோவாக நடிப்பதற்கான வாய்ப்புகள் குறைந்து விட்டதால், இப்படி ஒரு முடிவை எடுத்திருக்கலாம். இருப்பினும் கதாநாயகனாக பார்த்த ரசிகர்கள் வில்லனாக ஜீவா எப்படி இருப்பார் என்பதைப் பார்க்கவும் காத்திருக்கின்றனர்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →