எந்த சூழ்நிலையிலும் விஜய்யை விட்டுக்கொடுக்காத ரசிகர்கள்.. போங்க தம்பி இதெல்லாம் எங்களுக்கு ஜுஜுபி மாதிரி

நெல்சன் இயக்கத்தில் விஜய் நடிப்பில் அண்மையில் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்ற படம் பீஸ்ட். இப்படத்தில் விஜய் புதிய பரிமாணத்தில் தோன்றினாலும் ரசிகர்களின் கவனம் பெறவில்லை. மேலும் இப்படத்திற்காக மறுநாள் ஏப்ரல் 14ஆம் தேதி மிகப் பெரிய எதிர்பார்ப்புடன் கே ஜி எஃப் 2 படம் வெளியானது.

இந்நிலையில் பலரும் விஜய்யின் பீஸ்ட் படத்தைப்பற்றி பல நெகட்டிவ் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் கே ஜி எஃப் மாதிரி ஒரு பெரிய எதிர்பார்ப்பு இருக்கக்கூடிய பான் இந்தியா படத்துடன் விஜய் தன் பீஸ்ட் படத்தை ரிலீஸ் செய்து நெகடிவ் விமர்சனங்கள் இடையே நடுவில் ஒரு தனி ஆளாக நின்று வசூல் வேட்டை ஆடியிருக்கிறார் தளபதி என அவரது ரசிகர்கள் பெருமையாக கூறி வருகின்றனர்.

மேலும் என்னதான் இருந்தாலும் தளபதி விஜய் போல் ஒரு தைரியமான மனிதர் யாரும் கிடையாது எனக் கூறுகின்றனர். ஏனென்றால் வேறு ஒரு நடிகராக இருந்தால் கே ஜி எஃப் படத்தின் ரிலீஸின் போது தனது படத்தை ரிலீஸ் செய்ய விடாமல் தடுத்து இருப்பார்கள்.

ஆனால் அதை பற்றி எல்லாம் கவலைப்படாமல் விஜய் தைரியமாக பீஸ்ட் படத்தை வெளியிட்டார். மேலும் வெற்றி, தோல்வி என்பது சினிமாவில் சகஜமான ஒன்று. பல நடிகர்களும் இந்த இரண்டையுமே பார்த்து தான் சினிமாவில் உயரத்தை அடைந்து உள்ளனர்.

மேலும் வெற்றி பெற முடியாமல் இருக்கும் நடிகர்கள் தான் வெற்றியை நினைத்து கவலைப்பட வேண்டும். தளபதி விஜய்யை பற்றி நாம் கவலைப்படத் தேவையே இல்லை ஏனென்றால் இந்த படம் ஓடவில்லை என்றால் அடுத்த படத்தில் மிகப்பெரிய வெற்றி கொடுத்து தன்னை நிரூபித்து விடுவார்.

மேலும் விஜய்யின் படங்களில் வெளியாகும் போது அது ஒரு படத்திற்காக வந்த கூட்டம் கிடையாது ஒரு தனி மனிதனுக்கான வந்த கூட்டம். மேலும் விஜய் மாஸ்டர் இல்லை மான்ஸ்டர் என விஜயை பற்றி அவரது ரசிகர்கள் பெருமிதமாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார்கள்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →