கீர்த்தி சுரேஷுடன் ரொமான்ஸ் பண்ண ஆசைபட்ட பிரபல நடிகர்.. இப்ப ஒன்னுக்கு ரெண்டு சான்ஸ் கிடைச்சிருக்கு

கீர்த்தி சுரேஷ் தற்போது பல படங்கள் நடித்து வருகிறார் அதுவும் இவர் நடிப்பில் வெளியாகும் தெலுங்கு படங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதனால் தொடர்ந்து தெலுங்கு படங்களில் நடித்து வந்தார். தற்போது அங்கும் அவருக்கு வாய்ப்புகள் குறைய தற்போது தமிழ் சினிமாவை நாடியுள்ளார்.

கோலிவுட் லேட்டஸ்ட் டாக் என்னவென்றால் ஜெயம் ரவியும் நடிகை கீர்த்தி சுரேஷும் அடுத்தடுத்து இரண்டு படங்களில் ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளனராம். காமெடி படம் இயக்குவதில் ஸ்பெஷலிட்டான டைரக்டர் எம்.ராஜேஷ் இயக்கும் புதிய படத்தில் ஜெயம் ரவி நடிக்க கமிட் ஆகி உள்ளார். இந்த படத்தில் நாயகியாக ஏற்கனவே கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

தற்போது அடுத்ததாக ஜெயம் ரவி அறிமுக இயக்குனரான ஆண்டனி இயக்கும் படத்திலும் அவருக்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் ஆகியுள்ளாராம். முதன்முதலில் மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம் ரவிக்கு ஜோடியாக நடிக்க கீர்த்தி சுரேஷை கேட்டுள்ளனர். ஆனால் அப்போது அவர் ரஜினியின் அண்ணாத்த மற்றும் தெலுங்கில் மகேஷ் பாபுவுடன், நானியுடனும் நடிக்க கால்ஷீட் ஒதுங்கியிருந்ததால் அது கைகூடாமல் போனது.

ஆனால், தற்போது கிடைத்துள்ள வாய்ப்பை அவர் லாவகமாக பயன்படுத்தி கொண்டுள்ளார். மேடையில் பேசிய போது ஒரு முறை ஜெயம் ரவி நான் பல நடிகைகளுடன் ஜோடியாக நடித்து விட்டேன் ஆனால் கீர்த்தி சுரேஷ் உடன் நடிக்கவில்லை எனக் கூறியிருந்தார். அதற்கு அப்போது கீர்த்தி சுரேஷ் கண்டிப்பாக ஜோடியாக நடிக்கலாம் இப்போது ரொமான்ஸ் செய்யாவிட்டால் எப்போது ரொமன்ஸ் செய்ய முடியும் என நக்கல் அடித்து பதில் கூறினார். தற்போது இவர்கள் ரொமான்ஸ் செய்வதற்கு ஒருமுறை அல்ல இருமுறை வாய்ப்பு கிடைத்துள்ளது என ரசிகர்கள் கிண்டல் செய்து வருகின்றனர்.

தெலுங்கில் தொடர் படங்கள் இருந்தாலும் தமிழில், மணிரத்னம் படம், அதுவும் பொன்னியின் செல்வன் படத்தை தவற விட்ட பிறகு வாய்ப்புக்கள் குறைந்துள்ளது. தற்போது நடித்து முடிந்துள்ள சாணி காயிதம் படம் மட்டுமே தமிழில் கைவசம் உள்ளது. விஜய்க்கு ஜோடியாக தளபதி 66 படத்தில் நடிக்க ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தை நடத்தி, அதுவும் இல்லாமல் போய் விட்டது. இப்படியே போனால் தமிழில் காணாமல் போய்விடுவோமா என்ற நிலைக்கு கீர்த்தி சுரேஷ் வந்துள்ளார்.

இதனால் ஜெயம் ரவி – எம்.ராஜேஷ் இணைய உள்ள படத்தில் நடிப்பதற்காக தமிழ் சினிமாவின் முன்னணி காமெடியன்கள் பலரிடமும் பேசப்பட்டு வருகிறதாம். மிகப் பெரிய காமெடி படமாக இந்த படத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளதால் தமிழில் ஹீரோயினாக மீண்டும் ஒரு ரவுண்ட் வர இது நல்ல சான்ஸ் என கீர்த்தி சுரேஷ் முடிவு செய்து படத்தை ஓகே செய்துள்ளார். இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்க, நேமிசந்த ஜெகப் தயாரிக்க உள்ளார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →