வாய்ப்புக்காக இயக்குனர் செய்த மட்டமான வேலை.. மனைவியை தயாரிப்பாளருக்கு இறையாக்க துடித்த கேவலம்

பொதுவாக சினிமாவில் வாய்ப்புக்காக நடிகைகள் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது இப்போது சர்வ சாதாரணம் ஆயிற்று. ஆனால் பெற்ற அம்மாவே தனது மகளை அந்தரங்க தொழில் செய்ய வேண்டும் என்பதற்காக வளர்த்த சம்பவம் யாரும் கேட்டிராத ஒன்றாக இருக்கும். அதாவது சின்ன வயதிலேயே கான்வென்ட் ஸ்கூலில் மகளைப் படிக்க வைத்திருக்கிறார்.

காரணம் பெரிய தொழிலதிபர்கள், அரசியல் புள்ளிகள் மற்றும் நடிகர்களை வளைத்து போட வேண்டும் என்பதற்காகத்தான். சரளமாக ஆங்கிலம் பேசினால் எளிதில் அவர்களை கவர்ந்து விடலாம், அதோடு மட்டுமல்லாமல் பணமும் அதிகம் வாங்கலாம் என்ற எண்ணத்தில் நடிகையின் அம்மா இவ்வாறு செய்திருக்கிறார்.

ஒரு கட்டத்திற்கு மேல் சினிமாவில் அம்மாவின் வற்புறுத்தலின் பேரில் அட்ஜஸ்ட்மெண்ட் செய்து நடிகை வாய்ப்பு பெற்று இருக்கிறார். அதன் பிறகு நடிகையின் திறமையை பார்த்து டாப் ஹீரோக்களுடன் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. புகழின் உச்சியில் இருக்கும் போதே இயக்குனர் ஒருவரை நடிகை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

ஆரம்பத்தில் தான் அம்மாவால் டார்ச்சர் அனுபவித்த நடிகை திருமணத்திற்கு பிறகு நன்றாக இருப்பார் என கனவுடன் இருந்தார். ஆனால் வாய்ப்பு இல்லாமல் தவித்த இயக்குனர் தனது மனைவியையே தயாரிப்பாளருக்கு இறையாக்க துணிந்து விட்டார். இதை அறிந்த நடிகை அதிர்ச்சியாகி விட்டார். அதன் பிறகு தனது குழந்தைகளை அழைத்துக் கொண்டு வீட்டை விட்டு வெளியேறி விட்டார்.

மேலும் பிழைப்பிற்கு வழி வேண்டும் என்பதற்காக மீண்டும் சினிமாவை நாடி தான் நடிகை வந்தார். இனி அட்ஜஸ்ட்மெண்ட் செய்து வாய்ப்பு பெறக் கூடாது என்பதில் தெளிவாக இருந்த நடிகை கிடைக்கும் கதாபாத்திரங்களில் நடித்து வந்தார். அதன் மூலம் தனது வாரிசுகளையும் நன்றாக படிக்க வைத்து பெரிய ஆளாக்கிவிட்டார். இப்போதும் படங்களில் நடிகை நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →