பாய் பிரண்டுடன் படப்பிடிப்புக்கு வரும் நடிகை.. கடும் கோபத்திற்கு உள்ளான ஹீரோ

பொதுவாக வாரிசு நடிகைக்கு வாய்ப்பு சுலபமாக கிடைத்து விடுகிறது. இந்த வகையில் அப்பா மற்றும் அம்மா இருவருமே சினிமாவில் பேர் போனவர் என்பதால் நடிகை எளிதில் வாய்ப்பை பெற்றார். இந்த சூழலில் அக்கட தேசத்தில் கோலோச்சி இருந்த நடிகைக்கு தமிழிலும் வாய்ப்பு வந்து கொண்டிருக்கிறது.

இந்நிலையில் தன்னுடைய படத்தில் நடிகையை நடிக்க வைக்க வேண்டும் என்று மிகவும் விரும்பினார். இந்த சூழலில் படத்திலும் நடிகையுடன் நெருக்கமான காட்சிகள் கண்டிப்பாக இருக்க வேண்டும் என்று இயக்குனரிடம் காதும் காதும் வைத்தபடி ஹீரோ கூறி இருக்கிறார். அதேபோல் இயக்குனரும் கதையை தயார் செய்து வைத்துவிட்டார்.

இந்நிலையில் வாரிசு நடிகை படப்பிடிப்புக்கு வரும்போது தன்னுடன் பாய் பிரண்டையும் அழைத்துக் கொண்டு வருகிறாராம். இதனால் சில சமயங்களில் படப்பிடிப்பு எடுப்பது தாமதமாகிறதாம். அதோடு மட்டுமல்லாமல் சில சமயங்களில் பாய் பிரண்டுடன் அரட்டை அடித்துக் கொண்டிருக்கிறாராம்.

மேலும் அவர் கூட இருப்பதால் ஹீரோவால் நடிகையுடன் நெருக்கமாகவும் நடிக்க முடியவில்லை. இவ்வாறு ஹீரோ முதல் இயக்குனர் என படக்குழுவில் உள்ள அனைவரும் வாரிசு நடிகையால் சிரமத்தை சந்தித்து வருகிறார்கள். மேலும் நடிகையோ மிகப்பெரிய கை.

ஆகையால் யாராலும் எதுவும் செய்ய முடியாத காரணத்தினால் நடிகை ஓவர் ஆட்டம் போட்டு வருகிறார். எனவே படப்பிடிப்பும் சரியாக நடக்காமல் தாமதமாகிக் கொண்டே போகிறது. தேவையில்லாமல் அந்த வாரிசு நடிகையை படத்தில் போட்டு மாட்டிக் கொண்டோமே என்று இப்போது ஹீரோ விழிப்பிதுங்கி நிற்கிறார்

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →