தொலைக்காட்சி நடிகையாக பிரபலமான இவருக்கு சினிமா வாய்ப்புகள் எளிதாக கிடைத்தது. ஆனால் கடைசிவரை கதாநாயகியாக நடிக்கவில்லை. ஆனால் டாப் நடிகர்களின் படங்களில் துணை நடிகையாக கலக்கிக் கொண்டிருந்தார்.
அந்த சமயத்தில் தமிழகத்தில் செம பேமஸ் ஆக இருந்த சாமியாருடன் அந்தரங்க தொடர்பில் இருந்து பணத்தில் குளித்துக் கொண்டிருந்தார். அந்த பொய் பித்தலாட்ட சாமியாருடன் நடிகைக்கு தொடர்பு இருந்ததை போலீஸ் கண்டுபிடித்து, அவரை விசாரித்ததில் அதை ஒப்புக்கொண்டார்.
அதன்பின் அந்த நடிகையின் குடும்பத்தினர் அவருக்கு திருமணம் செய்து வைத்தனர். திருமணம் செய்தும் அந்த சாமியாருடன் தொடர்பிலிருந்து வந்தார். இதனால் நடிகைக்கு அந்த சாமியார் சென்னையில் வீடு வாங்கி கொடுத்தார்.
இது தெரிந்ததும் கடுப்பான கணவர் விவாகரத்து செய்து ஓடிவிட்டார். அதன் பின் சுதந்திரமாக மீண்டும் சினிமாவில் நடிக்க ஆரம்பித்தார். சினிமா வாய்ப்புக்காக அனைத்து மொழிகளிலும் முன்னணி நடிகராக இருக்கக்கூடிய பிரபலத்துடன் தொடர்பில் இருந்தார்.
இதற்குக் காரணம் அந்த நடிகை தமிழில் அவருடன் இணைந்து நடித்த பிறகுதான் இந்த மானங்கெட்ட காதல் பத்திக்கிச்சு. இதனால் நடிகை அந்த நடிகரின் படங்களில் தொடர்ந்து நடித்து வந்தார். ஊரே இவர்களது கள்ளக்காதலை பற்றி தான் பேசியது. இவர்கள் தொடர்பை எச்சரித்த நடிகரின் மனைவி கடைசியில் அவரும் விவாகரத்து செய்து சென்று விட்டார்.
தற்பொழுது அந்த நடிகர் நடிகையை கழட்டி விட்டு வேறொரு இளசை பிடித்துக் கொண்டார். இப்போது அந்த நடிகை சினிமாவிலும் இல்லை, டிவி நிகழ்ச்சிகளும் செய்யவில்லை. தன் வாழ்க்கையும் கெடுத்து அடுத்தவருடைய வாழ்க்கையும் கெடுத்து விட்டு, இப்போது இருக்கிற இடம் தெரியாமல் அமைதியாக இருந்து வருகிறார்.