காதலனுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு ஹீரோவுடன் அந்தரங்க உறவு.. வெளியான பப்ளி நடிகையின் வண்டவாளம்

நடிகை ஆரம்பத்தில் சின்ன கதாபாத்திரத்தில் படத்தில் நடித்தாலும் அதன் பிறகு தனது நடிப்பு திறமையால் பெரிய பட வாய்ப்புகளை பெற்றிருந்தார். அதுவும் நடிகை சற்று பப்ளியாக இருந்ததால் ஹீரோக்களுக்கும் பிடித்துவிட்டது. இதனால் நடிகைக்கு எக்கச்சக்க வாய்ப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருந்தது.

அப்போது தான் தன்னுடன் முதல் படத்தில் ஒரு நடிகர் நடித்த போது அவருடன் காதல் வலையில் விழுந்து உள்ளார். இருவரும் பல வருடங்களாக தங்களது காதலை யாருக்கும் தெரியாமல் தண்ணி ஊற்றி வளர்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் கத்திரிக்காய் முற்றினால் கடை தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.

அப்படிதான் இவர்களது காதல் விவகாரமும் வெளியில் தெரிந்து பூதாகர பிரச்சனையாக வெடித்தது. அதாவது நடிகரின் வீட்டில் இதற்கு சம்மதம் தெரிவிக்கவில்லையாம். ஏனென்றால் நடிகை பற்றியும் அவரது குடும்பத்தை பற்றியும் நன்கு தெரிந்ததால் இந்தப் பெண் நம்ம வீட்டு மருமகளாக வரக்கூடாது என ஸ்ட்ராக நடிகரின் அப்பா சொல்லிவிட்டார்.

இதனால் நடிகை மற்றும் நடிகர் இருவருமே காத்துக் கொண்டிருந்தார்கள். இந்த சூழலில் வேறு ஒரு ஹீரோவின் படத்தில் நடிகை நடித்துக் கொண்டிருக்கும் போது அவர் மீது மயக்கத்தில் இருந்திருக்கிறார். அப்போது ஷூட்டிங் முடித்துவிட்டு இருவரும் அந்தரங்க உறவில் இருந்துள்ளனர்.

இதனால் அந்த ஹீரோ நடிகைக்கு அடுத்த படத்திலும் வாய்ப்பு வாங்கி கொடுத்து தனது அருகிலேயே வைத்துக் கொண்டாராம். இந்த விஷயம் எல்லாம் காதல் நடிகருக்கு தெரிந்தும் கல்யாணத்துக்கு பிறகு இப்படி எல்லாம் பண்ண கூடாது என்று ஸ்ட்ரிக்காக சொல்லிவிட்டாராம். நடிகையும் திருமணத்திற்கு பிறகு கட்டப்பாட்டுடன் இருந்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →