வருங்கால கணவர் என காசு வாங்காமல் நடித்த நடிகை.. கடைசியில் கம்பி நீட்டிய ஹீரோ

நடிகை நடிப்பு, நடனம் என இரண்டிலுமே பின்னிப் பெடல் எடுக்கக் கூடியவர். அவருடைய இடுப்பு அழகிலேயே ரசிகர்கள் இறங்கி கிடந்தனர். பல முன்னணி நடிகர்கள் நடிகையின் படத்தில் வாய்ப்பு கிடைக்காதா என கிறங்கி போய் கிடந்தனர். ஆனால் நடிகையின் பார்வையோ வேறு ஒரு நடிகர் மீது பட்டது.

அவருடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார். அதுமட்டுமின்றி அந்த ஹீரோ அதன் பிறகு தயாரிப்பாளர் அவதாரமும் எடுத்தார். அந்தச் சமயத்தில் இந்த நடிகையை தனது படத்தில் கதாநாயகியாக போட்டுள்ளார். அதற்கு சம்பளமும் நடிகைக்கு தராமல் ஏமாற்றி உள்ளார் தயாரிப்பாளர்.

ஏனென்றால் நாம் இருவரும் ஒருவர் தானே. நீ என்னுடைய வருங்கால மனைவியாக போகிறாய் என ஆசை வார்த்தைகளை கூறியிருக்கிறார். நடிகையும் இவரை நம்பி எனக்கு கணவராக வரப்போறவர் என்ற ஆசையில் ஒரு ரூபாய் கூட பணம் வாங்காமல் அந்த படத்தில் நடித்து கொடுத்தார்.

அந்த படம் வெளியாகி சூப்பர் டூப்பர் ஹிட் ஆகி இருந்தது. ஆனால் அதன் பிறகு சில வருடங்கள் இருவரும் உறவில் இருந்தனர். அதன்பிறகு நடிகை மார்க்கெட் குறைந்துவிட்டது என தெரிந்தவுடன் அந்த நடிகர் கம்பி நீட்டி விட்டாராம். இதனால் நொந்து போய் நடிகை சில காலம் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளார்.

இதைத்தொடர்ந்து வேறு வழியில்லாமல் சொந்த ஊரிலேயே மாப்பிள்ளை ஒருவரை பார்த்து திருமணம் செய்து கொண்டார். அதன் பிறகு தற்போது குழந்தை, குடும்பம் என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். ஆனாலும் தன்னை ஏமாற்றிய அந்த ஹீரோ மீது தற்போதும் கடுப்பில் இருக்கிறாராம்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →