நம்பி வீட்டில் விட்டதற்கு கணவனை கைக்குள் போட்டுக் கொண்ட நடிகை.. புலம்பித் தவிக்கும் தோழி

80’s நடிகையின் சாயலில் இருக்கும் நடிகை ஒருவர் சினிமாவுக்கு வந்த புதிதிலேயே ரசிகர்களால் கொண்டாடப்பட்டார். முதல் படம் ஓரளவு ஓடிய நிலையில் அடுத்தடுத்து டாப் ஹீரோக்களுடன் ஜோடி போட ஆரம்பித்தார். எல்லா படமுமே வேற லெவலில் ஹிட் ஆனதால் மார்க்கெட் உயரத்தை தொட்டது.

அதன் பிறகு பல சர்ச்சையில் சிக்கிய ஒரு நடிகருடன் நெருக்கமாக பழகி வந்தார் நடிகை. ஆனால் அந்த நடிகரோ மற்ற நடிகைகளை எப்படி கழட்டிவிட்டாரோ அதேபோல் இவரையும் நன்றாக அனுபவித்துவிட்டு பாதியிலேயே கழட்டி விட்டார். நம்பி ஏமாந்து போனதால் நடிகை மிகுந்த மன வருத்தத்தில் பட வாய்ப்புகளையும் தவறவிட்டு விட்டார்.

அப்போது தான் நடிகையின் தோழி அவரது வீட்டில் அடைக்கலம் கொடுத்திருக்கிறார். சிறிது மாதங்கள் தோழியின் வீட்டிலேயே நடிகை தங்கி இருந்துள்ளார். அப்போது அங்கு நடக்கும் பிரச்சனை எல்லாமே நடிகைக்கு தெரிய வந்துள்ளது. அவர்களின் குடும்ப பிரச்சனையில் ஆலோசனை சொல்வது மட்டுமின்றி கடன் பிரச்சனையிலும் பணம் கொடுத்து உதவி இருக்கிறார்.

இதன் மூலம் தோழியின் கணவர் மற்றும் நடிகைக்கு ஓவர் நெருக்கம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் கொஞ்சம் கொஞ்சமாக கணவர் தனது மனைவியை வெறுக்க ஆரம்பித்து நடிகையின் வலையில் சிக்கி இருக்கிறார். மேலும் நடிகை தோழிக்கு நம்பிக்கை துரோகம் செய்ததை தாங்கிக் கொள்ள முடியவில்லை.

அதோடு மட்டுமல்லாமல் கள்ளக்காதல் வைத்துக் கொண்ட கணவனையும் விவாகரத்து செய்து விட்டார். இதுதான் சரியான நேரம் என்று நடிகை தோழியின் கணவரை உடனடியாகவே திருமணம் செய்து கொண்டார். ஆனால் தோழியின் வயிற்றெரிச்சலில் தான் இப்போது நடிகை வாழ்ந்து கொண்டிருக்கிறார். ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுன கதையாக தான் இவர்களது கதை இருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →