சாதாரணமாக சினிமாவில் உள்ள நடிகர், நடிகைகள் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட படங்களில் ஒன்றாக நடித்தால் கிசுகிசுக்கப்படுவார்கள். இது காலம் காலமாக நடந்து வருகிறது. இந்நிலையில் பிரபல நடிகர் ஒரு நடிகையுடன் இரண்டு, மூன்று படங்களில் ஒன்றாக நடித்தார்.
ஆனால் இவர்களுக்குள் ஏற்பட்ட பழக்கத்தின் காரணமாக நடிகையின் வீட்டிற்கு அடிக்கடி அந்த நடிகர் போக ஆரம்பித்தார். மேலும் பிரபல நடிகர் தன் மீது வைத்திருக்கும் ஆசையை புரிந்து கொண்ட அந்த நடிகை அவரிடம் இருந்து பல சொத்துக்களை அபகரித்துக் கொண்டார்.
பெரிய பங்களா, பெட்ரோல் பங்க் என தன்னுடைய பெயரில் சொத்துக்களை வாங்கி குவித்துக் கொண்டார். ஓரளவு சொத்துக்களை சுருட்டி கொண்ட பிறகு அந்த நடிகரை கழட்டி விட்டுவிட்டு வேறு ஒரு இயக்குனரை மணமுடித்துக் கொண்டார். இப்போது வரை அவர்கள் சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.
மேலும் பிரபல நடிகர் அதன் பிறகு தன்னுடன் நடித்த மற்றொரு நடிகையின் வலையில் விழுந்துவிட்டார். இவர்கள் இருவரும் கண்டிப்பாக திருமணம் செய்யப் போகிறார்கள் என கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வந்தது. இருவருக்குமே திருமணம் செய்து கொள்ளும் அளவிற்கு ஆசையும் இருந்தது.
ஆனால் நடிகரின் குடும்பத்தினரோ அந்த நடிகை ஏற்கனவே திருமணம் ஆனவர் என இவர்களது கல்யாணத்துக்கு தடை போட்டனர். வேறு வழியில்லாமல் அந்த நடிகை இடமிருந்து பிரபல நடிகர் விலகி விட்டார். ஆனால் அந்த நடிகை சேர்ந்த நேரம் தான் ஹீரோ சினிமாவில் ஓகோ என்று வளர்ச்சி அடைந்தார். அதன் பின்பு தன்னுடைய குடும்பம் பார்த்த பெண்ணை திருமணம் செய்து கொண்டார்.