வாயிலேயே வடை சுட்ட நடிகர்.. நம்பி ஏமாந்து போன ஹீரோயின்

நடிகர் பார்ப்பதற்கு தான் அப்பாவி போல் இருந்தாலும் பண்ற வேலை எல்லாமே படு பயங்கரம் தான். 40 வயதை கடந்தும் சிங்கிளாகவே சுற்றி வரும் அந்த ஹீரோ திருமணத்திற்கு தடைவிதிக்க ஒரு காரணம் இருக்கிறதாம். அதாவது குடும்பம் என்ற ஒரு சூழ்நிலை வந்த பிறகு நினைத்தது போல் அவரால் ஆட முடியாது.

ஆகையால் தான் சாக்கு போக்கு சொல்லிக்கொண்டு தற்போது வரை திருமணத்தை தள்ளிப் போட்டுக் கொண்டிருக்கிறார். இந்த சூழலில் அவரை நம்பி இளம் நடிகை வலையில் விழுந்தது. இவர்கள் இருவருக்கும் திருமணம் நடக்கும் என அரசல் புரசலாக பேசப்பட்டது. மேலும் நடிகையிடம் ஆசை வார்த்தை பேசி இருந்தார்.

வாயிலேயே வடைசுட்ட இவரின் பேச்சை நம்பி நடிகை அவரின் வலையில் விழுந்துவிட்டார். ஆனால் சிறிது நாட்களிலேயே நடிகரின் சுயரூபம் அறிந்து கொண்ட அவரை விட்டு பிரிந்து விட்டார். ஆனால் நீண்ட நாட்களாக இவர்களைப் பற்றி கிசுகிசுக்கள் வெளியாகிக் கொண்டு தான் இருந்தது.

இந்த சூழலில் இணைவதாக ஒரு செய்தி காட்டு தீ போல் பரவி வந்தது. ஆனால் நடிகையோ இது வதந்தி என மொத்த சர்ச்சைக்கும் முற்றுப்புள்ளி வைத்து விட்டார். ஏனென்றால் இதுவரை அவரை நம்பி ஏமாந்தது போதும் என்ற நிலைக்கு வந்து விட்டார். ஆனால் நடிகரோ இப்போது பல பெண்களுடன் உல்லாசமாக இருந்து வருகிறார்.

அதோடு மட்டுமல்லாமல் இதனால் சில பிரச்சனைகளையும் சந்தித்து அதற்கான சிகிச்சையும் பெற்று வருவதாக கோடம்பாக்கத்தில் கிசுகிசுக்கப்பட்டது. இப்போது சினிமா வாழ்க்கையும் அவருக்கு கேள்விக்குறியான நிலையில் திருமணம் நடக்குமா என்ற சந்தேகம் ஏற்பட்டிருக்கிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →