தள்ளாத வயதில் நடிகையை ஏமாற்றிய இயக்குனர்.. வாரிசு இல்லாமல் தனிமையில் வாடும் பரிதாபம்

இயக்குனர் சினிமாவில் நுழைந்தது வேறு பரிமாணமாக இருந்தாலும் இயக்கத்தின் மீது அதிக ஆர்வம் இருந்துள்ளது. இதன் காரணமாக படங்களை இயக்க தொடங்கிய நிலையில் எல்லா படமுமே ஹிட் ஆனது. அதுவும் டாப் நடிகர்களின் படங்களை இவர் இயக்க ஆரம்பித்தார். இவ்வாறு இயக்குனரின் சினிமா கேரியர் உச்சத்தில் இருந்தது.

திறமை இருக்கும் இடத்தில் சில கெட்ட பழக்கங்களும் இருப்பது சர்வ சாதாரணம் ஆகிவிட்டது. அப்படிதான் இயக்குனர் மது, மாது என இரண்டு மீதும் மிகுந்த பிரியம் கொண்டிருக்கிறார். அதாவது ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு சில வருடங்களிலேயே விவாகரத்து பெற்று பிரிந்து விட்டார் இயக்குனர்.

அதன் பின்பு தனது படத்தில் கதாநாயகியாக நடித்த ஒரு நடிகை மீது காதல் வயப்பட்டார். மேலும் வெளி உலகம் தெரியாமல் அவரை திருமணம் செய்து கொண்டு குடும்பம் நடத்தி வந்தார். திடீரென நடிகை தற்கொலை செய்து கொண்டது மிகுந்த பரபரப்பாக பேசப்பட்டு வந்தது. ஆனாலும் சில வருடங்களிலேயே இந்த பிரச்சனை மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து வெள்ளித்திரையில் சில படங்களில் நடித்து சின்னத்திரையில் கோலோச்சி இருந்த நடிகை இயக்குனர் மீது ஆசையில் இருந்துள்ளார். தள்ளாத வயதாக இருந்தாலும் நடிகை மீது உள்ள மோகத்தால் அவரை வப்பாட்டியாக இயக்குனர் வைத்துக் கொண்டார். கடைசி வரை அவருக்கு மனைவி என்ற அங்கீகாரம் கொடுக்கவில்லை.

அந்த நடிகைக்கு பிரபல இயக்குனரின் மனைவி என்ற பாக்கியம் தான் கிடைக்கவில்லை என்றாலும் குழந்தை பாக்கியமும் இல்லாமல் போய்விட்டது. வயதான ஒருவர் மீது விழுந்த ஆசையால் இளம் வயதிலேயே பல பிரச்சனைகளை சந்தித்து வந்த நடிகை இப்போது வயது முதிர்வடையும் போதும் தனிமையில் தவித்து வருகிறார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →