சைக்கோ இயக்குனரால் நிம்மதியை இழந்த மனைவி.. திட்டம் போட்டு பிரித்து விட்ட தாய் கிழவிகள்

நல்லா இருந்த குடும்பத்துல கும்மி அடிக்கிறதுக்கு சில பேர் இருப்பாங்க. அப்படித்தான் பிரபல இயக்குனர் ஒருவரோட வீட்டுல நடந்த சம்பவத்துக்கு பின்னால் சில தாய்க்கிழவிகள் இருக்கிறதா இப்போ சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.

சினிமாவுக்காக பார்த்து பார்த்து ஒவ்வொரு விஷயத்தையும் செய்து வரும் அந்த இயக்குனர் தன் வீட்டை கவனிப்பதில்லை என்று ரொம்ப நாட்களாகவே ஒரு குற்றச்சாட்டு இருக்கிறது. அதற்கேற்றார் போல் சமீபத்தில் நடந்த அவருடைய விவாகரத்தும் பல விமர்சனங்களுக்கு ஆளானது.

ஆனால் உண்மையில் இந்த சம்பவத்திற்கு பின்னால் பல விஷயங்கள் இருக்கிறது. அதிலும் ஒரு காலத்தில் சினிமாவில் நடித்து இப்போது குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகி இருக்கும் நடிகைகளும், டாப் ஹீரோக்களின் மனைவிகளும் தான் காரணம் என்று கூறுகிறார்கள்.

ஹை கிளாஸ் பெண்கள் எல்லாம் பார்ட்டி, கிளப் போன்ற இடங்களுக்கு செல்வது போல் இந்த கூட்டமும் அடிக்கடி வெளியில் சுற்றி வந்திருக்கின்றனர். இயக்குனர் குடும்பத்தை கவனிக்காததால் நிம்மதி இன்றி தவித்த அவரின் மனைவியும் இந்த குழுவோடு சேர்ந்து நேரத்தை செலவழித்து இருக்கிறார்.

அப்போது இந்த தாய்க்கிழவிகள் உசுப்பேத்தி விட்டதன் காரணமாகவே இந்த குடும்பம் இப்போது ரெண்டு பட்டு போயிருக்கிறதாம். குடும்பத்தை கவனிக்காமல் ஷாப்பிங், அரட்டை கச்சேரி என இருக்கும் இந்த ஆன்ட்டிகள் இன்னும் யார் வீட்டில் குண்டு வைக்கப் போகிறார்களோ என்ற பீதியில் பல கணவன்மார்கள் இருக்கிறார்களாம்.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →