விஜய் பட நடிகை பாத்ரூமில் செய்யும் மட்டமான வேலை.. அவரே சொன்ன அருவருப்பான விஷயம்

விஜய் படத்தில் நடித்தால் போதும் என பல நடிகைகள் உள்ளனர். அப்படிதான் ராஷ்மிகா தனது வாழ்நாள் கனவாக விஜய்யுடன் நடிக்க வேண்டும் என எண்ணி இருந்தார். வாரிசு படத்தில் அது நிறைவேறியது. விஜய்யே கொஞ்சமும் எதிர்பார்க்காமல் அவர் படத்தில் நடித்த ஒரு நடிகை இருக்கிறார்.

அந்த நடிகை தமிழில் ஒரே ஒரு படத்தில் தான் நடித்திருந்தார். அதுவும் விஜய்யுடன் ஜோடி போட்டு நடித்திருந்தார். அதன் பிறகு பாலிவுட்டில் வாய்ப்பு கிடைக்க அங்கு சென்றுவிட்டார். சமீபத்தில் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் ரசிகர்களை அதிர்ச்சியில் உள்ளாக்கியுள்ளது.

அதாவது விஜய்யின் தமிழன் படத்தில் நடித்தவர் பிரியங்கா சோப்ரா. உலக அழகியான இவர் இந்த படத்தில் நடித்ததால் இதை வைத்தே படக்குழு ப்ரோமோஷன் செய்தது. ஆனால் படம் எதிர்பார்த்த அளவு வெற்றி பெறவில்லை. இருந்தாலும் பிரியங்கா சோப்ராவுக்கு பாலிவுட்டில் பட வாய்ப்பு கிடைத்தது.

இதை சரியாக பயன்படுத்திக் கொண்டு பாலிவுட் சினிமாவில் முன்னணி நடிகையாக பிரியங்கா சோப்ரா வளம் வந்தார். அதன் பிறகு அங்கிருந்து ஹாலிவுட் பட வாய்ப்பு கிடைத்தது. சமந்தா நடிப்பில் உருவாகி இருக்கும் சிட்டால் வெப் தொடரில் பிரியங்கா சோப்ராவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

பிரபல ஊடகம் ஒன்றிற்கு பிரியங்கா சோப்ரா பேட்டி அளித்துள்ளார். அவருடைய கல்லூரி காலத்தில் அமெரிக்கா சென்றிருந்தாராம். அப்போது மிகுந்த பயந்த சுபாவம் கொண்டவராக இருந்துள்ளார். இதனால் யாரிடமும் அதிகம் பேசவும் மாட்டாராம். மேலும் யாரும் பார்க்காதபடி உணவு தின்பண்டங்களை வாங்கிக் கொண்டு பாத்ரூமில் சாப்பிடுவாராம்.

அதன் பிறகு கிளாஸ் ரூமுக்கு வந்து அமர்ந்து கொள்வாராம். இவ்வாறு நாட்கள் செல்ல சில நாட்களுக்குப் பின்பு எல்லோரையும் உற்று கவனிக்க ஆரம்பித்தாராம். அதன் பின்பு அவர்களை நண்பர்கள் ஆக்கிக் கொண்டு தன்னுடைய பயத்தை ஒதுக்கினாராம். ஆகையால் இப்போது இவ்வளவு பெரிய நடிகையாக பிரியங்கா சோப்ராவால் ஜொலிக்க முடிகிறது.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →