புதன்கிழமை, அக்டோபர் 16, 2024

பாக்கியாவின் வாழ்க்கையை காலி பண்ணிய கோபி.. ஹோட்டலை சீல் வைக்கும் அதிகாரி, ஈஸ்வரி எடுக்க போக முடிவு

Bhakkiyalakshmi Serial: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வருகின்ற பாக்கியலட்சுமி சீரியலில், பாக்கியா எடுத்த ஆர்டர் மூலம் ஏதாவது பிரச்சினை பண்ணி ஹோட்டலை இழுத்து மூட வேண்டும் என்பதற்கு ஏற்ப கோபி பக்கவாக பிளான் போட்டுவிட்டார். அதன்படி பாக்யா ஹோட்டலில் வேலை பார்க்கும் ஆனந்த், பாக்கிய சமைத்த சாப்பாடுகள் அனைத்திலும் கலப்படத்தை ஏற்படுத்தி விட்டார்.

இது எதுவும் தெரியாத பாக்யா, சமைத்த சாப்பாடுகள் அனைத்தையும் டெலிவரி பண்ணிவிட்டார். ஆனால் அந்த சாப்பாட்டை வாங்கி சாப்பிட்ட மக்கள் ஒவ்வொருவரும் உடல் ரீதியாக பிரச்சனை சந்தித்து வரும் நிலையில் பாக்யா ஹோட்டலுக்கு நேரடியாக அனைவரும் வந்து பிரச்சினை பண்ண ஆரம்பித்து விட்டார்கள். இதைக் கேட்டதும் பாக்யா என்ன நடக்குது என்று தெரியாமல் அதிர்ச்சியாக்கி இருக்கிறார்.

ஏனென்றால் எல்லாமே பார்த்து பார்த்து தான் பாக்யா காலையில் சமைத்து வைத்தார். அது எப்படி கெட்டுப் போகும் என்று குழப்பத்தில் இருக்கிறார். ஆனால் இந்த பிரச்சினை கொஞ்சம் கொஞ்சமாக வெளியே வந்ததால் பத்திரிகை மற்றும் டிவி மூலம் ஈஸ்வரி ஹோட்டலில் சாப்பிட்ட மக்களுக்கு உடல் ரீதியாக பிரச்சனை என்ற செய்திகள் வர ஆரம்பித்து விட்டது.

இதை தெரிந்த கோபி, மனதார சந்தோஷப்பட்டு இதை கண்கொளிர பார்த்து ரசிக்க வேண்டும் என்று ஹோட்டலுக்கு வந்து விடுகிறார். பிறகு பாக்யா ஹோட்டலில் ஒட்டுமொத்த மக்களும் பிரச்சனை பண்ணி பாக்யாவை கேள்வி கேட்டு ரகளை பண்ணுவதை பார்த்து சந்தோஷப்படுகிறார். அத்துடன் மேல் அதிகாரிகளும் வந்து ஹோட்டலை சோதனை நடத்தி வருகிறார்கள்.

இதையெல்லாம் ஹோட்டலில் இருந்து ஆனந்த் வீடியோ எடுத்து கோபிக்கு அனுப்பி கொண்டிருக்கிறார். இந்த விஷயம் அனைத்தும் டிவி மூலம் வந்ததால் ஈஸ்வரி, செழியன், ஜெனி அனைவரும் வீட்டில் இருந்தபடியே பார்க்கிறார்கள். இந்த மாதிரி ஒரு இக்கட்டண சூழ்நிலையில் பாக்கியவை நிறுத்தி அவமானப்பட்டு நடுத்தெருவுக்கு கொண்டு வர வேண்டும் என்றுதான் கோபி, ஆனந்தை பகடகையாக யூஸ் பண்ணினார்.

அதே மாதிரி கோபி நினைத்தபடி பாக்கியா ஹோட்டல் இழுத்து மூடு அளவிற்கு பிரச்சனையை சந்தித்து விட்டது. இதனை தொடர்ந்து ஒவ்வொரு பிரச்சனைகளாக கொடுத்து பாக்யாவை நெருக்கடியில் தவிக்க வைக்க போறார். ஆனால் ஈஸ்வரி துவங்கி வைத்ததினால் தான் இப்படி ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று தவறாக நினைத்து ஏதாவது விபரீதமாக முடிவெடுக்கவும் வாய்ப்பிருக்கிறது.

கடைசியில் கோபி தன்னால தான் இந்த மாதிரி அம்மாவுக்கு ஒரு பிரச்சனை ஏற்பட்டு இருக்கிறது என்று நினைத்து வருத்தப்பட போகிறார். எவ்வளவு பட்டாலும் திருந்த மாட்டேன் என்பதற்கு ஏற்ப கோபியின் செயல்கள் ஒவ்வொரு நாளும் வன்மத்தை அதிகரித்துக் கொண்டே போகிறது. தற்போது பாக்யாவிற்கு ஏற்பட்டிருக்கும் இந்த பிரச்சனையை எப்படி சமாளிக்க போகிறார் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

- Advertisement -spot_img

Trending News