வளர்த்த பின்னால் தன் கட்டுப்பாட்டில் வைத்துக்கொண்ட இயக்குனர்.. கண்ணில் பட்டதும் கந்தலான நடிகை

சினிமா படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க எதார்த்தமாக வந்தவரை டாப் இயக்குனர் தன்னுடைய படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகப்படுத்தினார். இப்படி தொடர்ந்து இரண்டு சூப்பர் ஹிட் படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு பரீட்சையமான அந்த நடிகை, அதன்பின் அவருக்கு நிறைய வாய்ப்புகள் வர வர பெரிய நடிகையாக வளர்ந்து விட்டார்.

வளர்ந்த பின் இந்த நடிகை, குடும்ப சென்டிமென்ட் படங்களை எடுத்து கோலிவுட்டின் முன்னணி இயக்குனராக வலம் வந்த இன்னொரு இயக்குனரின் கண்ணில் பட்டதும் அவருடைய வாழ்க்கையே கந்தல் ஆனது. அவர் அந்த நடிகையை அட்ஜஸ்ட்மென்ட் செய்து தன்னுடைய படத்தில் நடிக்க வைத்தார்.

சினிமாவில் நடக்கும் எத்தனையோ அட்ஜஸ்ட்மென்ட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறோம். இயக்குனர்கள் தங்களுடைய படத்தில் நடிக்கும் நடிகைகளை சமயம் பார்த்து பயன்படுத்திய பிறகு விட்டு விடுவார்கள். ஆனால் இந்த இயக்குனர் குழந்தை நட்சத்திரமாக சினிமாவிற்கு வந்த போதே அந்த நடிகையின் மீது இனம் புரியாத ஈர்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

அதனால் வளர்ந்த பிறகு அந்த நடிகையை தனது கட்டுப்பாட்டுக்குள்ளே வைத்துக்கொண்டு தன்னுடைய படங்களில் மட்டுமே நடிக்க வேண்டும் என்று தொடர்ந்து வாய்ப்புகளை கொடுத்திருக்கிறார். என்ன தான் அடுத்தடுத்த பட வாய்ப்புகள் கிடைத்துக் கொண்டிருந்தாலும் அந்த இயக்குனரின் கட்டுப்பாட்டில் இருந்து வெளியில் வர முடியாமல் நடிகை தவித்தார்.

இதனால் அவர் என்ன செய்தாலும் யாரை காதலித்தாலும் பிரிக்கும் வில்லத்தனமான வேலையையும் அந்த இயக்குனர் செய்து வந்தார். இவருடைய இந்த நடவடிக்கை பற்றி நாலாபுறமும் விமர்சிக்கப்பட்டது. அதன் பின் பத்திரிகைகளில் அந்த இயக்குனரை பற்றி தவறான செய்திகள் வெளிவந்தன.

அவருக்கும் குடும்பம், குழந்தை குட்டி என்றெல்லாம் இருக்கிறது. அதனால் அவருடைய குடும்பத்திலும் இந்த விஷயம் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியது. மறுபடியும் சினிமா தொழிலும் பாதிக்கும் என ஒரு வழியா அந்த நடிகையை விட்டு விட்டார்.