நடிகை முதல் படத்திலேயே சில்மிஷமான காட்சியில் நடித்து அவப்பெயரை வாங்கிக் கொண்டார். ஆனால் அடுத்தடுத்த படங்களில் கதையில் கவனம் செலுத்தி துணிச்சலான நடிகை என்ற பெயரை பெற்றார். இதனால் டாப் நடிகர்களுடன் நடிக்கும் வாய்ப்பை பெற்றிருந்தார்.
இந்நிலையில் சினிமா பிரபலம் ஒருவரை நடிகை திருமணம் செய்து கொண்டு கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். அப்போது சில வருடங்கள் தான் இந்த கல்யாணம் நீடிக்கும் என பலர் விமர்சித்தனர். அதேபோல் நடிகையின் நடவடிக்கை பிடிக்காத காதல் கணவர் அவரை விவாகரத்து செய்து விட்டார்.
அதன் பிறகு அந்த சினிமா பிரபலம் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்டு குடும்பம், குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார். மேலும் இந்த நடிகை விவாகரத்துக்கு பிறகு மேலும் படங்களில் கவர்ச்சி காட்ட ஆரம்பித்து விட்டார். அதுமட்டுமின்றி சமூக வலைத்தளத்தில் மோசமான கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு வந்தார்.
இதனால் இவரது சமூக வலைதள பக்கத்தை நிறைய பேர் ஃபாலோ செய்து வருகிறார்கள். ஆனால் சில மாதங்களாகவே சமூக வலைதள பக்கத்தில் நடிகை அவ்வளவு ஆக்டிவாக இல்லை. இருக்கிற இடமே தெரியாத அளவுக்கு அமைதியாக உள்ளார். விசாரித்து பார்த்தால் தான் தெரிகிறது நடிகையின் வலையில் தொழிலதிபர் மாட்டியிருக்கிறாராம்.
ஆகையால் இருவரும் பார்ட்டி, பப் என சுற்றி வருகிறார்கள். மேலும் கூடிய விரைவில் நடிகை அந்த தொழிலதிபரை இரண்டாவது திருமணம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த திருமணம் ஆவது நடிகைக்கு கடைசி வரை நீடிக்க வேண்டும் என ரசிகர்கள் கூறி வருகிறார்கள்.