கேடு கெட்ட பழக்கத்தால் பறிபோன குழந்தை பாக்கியம்.. கணவர் விட்டுச் சென்றதால் பலான தொழிலுக்கு சென்ற நடிகை

பிரபல வாரிசு நடிகருக்கு ஜோடியாக அறிமுகமானவர் தான் அந்த நடிகை. வசீகர தோற்றமும், பப்லி முகமும் அவரை குறுகிய காலத்திலேயே ஏராளமான படங்களில் நடிக்க வைத்தது. வரிசையாக முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்த அவர் சினிமா பிரபலம் ஒருவரை காதலித்து வந்தார்.

இவர்களின் காதலே போதை பழக்கத்தின் மூலம் தான் உருவாகி இருக்கிறது. அந்த பழக்கத்திற்கு அடிமையான இவர்கள் இருவரும் ஒரு கட்டத்தில் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்தனர். ஆனால் பல வருடங்கள் ஆகியும் குழந்தை இல்லாததால் இந்த ஜோடி மருத்துவமனைக்கு சென்று பரிசோதித்து இருக்கிறது.

அப்போது தான் அதிர்ச்சியான தகவல் வெளிவந்தது. அதாவது அந்த கேடுகெட்ட பழக்கத்தின் காரணமாக நடிகையின் கணவருக்கு அப்பாவாகும் வாய்ப்பு இல்லை என மருத்துவர்கள் கூறிவிட்டனர். அதை தொடர்ந்து பல டாக்டர்களிடம் சென்றும் இதே பதில் தான் கிடைத்தது. அதனால் தனக்கு ஒரு குழந்தை பாக்கியம் கிடைக்கவில்லையே என்று நடிகை மனசொடிந்து போயிருக்கிறார்.

அதேபோன்று அவருடைய கணவரும் விரக்தியில் நடிகையை விட்டு பிரிந்து சென்றிருக்கிறார். இப்படி பல பிரச்சனைகள் வந்ததில் நடிகை சினிமாவையும் சரிவர கவனிக்காமல் இருந்திருக்கிறார். அதனால் அவருக்கான வாய்ப்புகளும் கொஞ்சம் கொஞ்சமாக குறைய ஆரம்பித்தது.

அப்போது தான் நடிகை, கணவரும் இல்லை வாய்ப்பும் இல்லை என பொருளாதார தேவைக்காக பலான தொழிலுக்கு சென்று இருக்கிறார். இது அப்போது மீடியாக்களில் கிசுகிசுவாகவே வெளிவந்தது. முன்னணி நடிகையாக கொடிகட்டி பறக்க வேண்டிய நடிகை இதுபோன்ற தவறான செயல்களால் தன் வாழ்க்கையை இழந்து இப்போது இருக்கும் இடம் தெரியாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.