50 வயதாகும் அக்கட தேசத்து டாப் இயக்குனர், குடும்ப சென்டிமென்ட் மற்றும் காதல் சார்ந்த நகைச்சுவை கலந்து படங்களையும் இயக்கியதன் மூலம் திரை உலகில் ரவுண்டு கட்டிக் கொண்டிருக்கிறார். இவர் நிறைய நந்தி அவார்ட், ஃபிலிம் ஃபேர் அவார்ட் என வாங்கி குவித்துள்ளார்.
இப்படி இளம் இயக்குனர்களுக்கு எல்லாம் முன் மாதிரியாக இருக்கக்கூடியவர், அவர்களுக்கு எல்லாம் மிஞ்சும் அளவுக்கு அந்தரங்க சேட்டைகளை செய்து கொண்டிருக்கிறார். இவர் படங்களில் நடிக்க நடிகைகள் போட்டி போட்டு தன்னையே அவருக்கு கொடுத்து விடுவார்கள். அந்த அளவிற்கு இவர் மிகப்பெரிய மன்மதனா என நினைக்க தோன்றும்.
ஆனால் இவர் அவருக்கு பிடித்த ஒரு கதாநாயகி தேர்ந்தெடுத்து அவரை தனக்கு பிடிக்கும் வரை வைத்துக்கொண்டு அவரை படங்கள் நடிக்க வைப்பார். பின் அடுத்த கதாநாயகி தேடி சென்று விடுவார். இவர் படத்தின் நடித்த எல்லா டாப் நடிகைகளுக்கும் இதே நிலைமை தான் ஏற்பட்டிருக்கிறது
இவர் சமீபத்தில் ஒரு கியூட் நடிகையுடன் சுற்றுவது மற்ற கதாநாயகிகள் மற்றும் புதிதாக வரும் கதாநாயகிகள் பொறாமைப்பட செய்தது. ஆனால் அந்த கியூட் நடிகை வேறு வழி இல்லாமல் தான் அந்த இயக்குனருக்கு தன்னை அர்ப்பணித்திருக்கிறார். இருப்பதும் இவருடைய திறமையால் அக்கட தேசத்தில் முக்கிய டைரக்டராக இருப்பதினால் அனைவருக்கும் பிடித்த இயக்குனராக உள்ளார்.
ஆனால் இவருக்குள் இருக்கும் பெண் மோகத்தை மட்டும் அடக்கினால் பல நடிகைகளின் வாழ்க்கை பிரதானமாக இருக்கும். தனக்கு பிடித்த கதாநாயகி தனக்கு ஒத்துழைப்பு கொடுக்கவில்லை என்றால் அவரை படங்களிலேயே நடிக்க விட மாட்டார். அதை மீறி அந்த நடிகை வேறு யாரையாவது காதலித்தால் அவர்களை பிரித்து விடுவார். அந்த அளவிற்கு இவர் பெண் பித்தராக இருந்து வருகிறார்.