பல்வேறு குடும்ப கதாபாத்திரங்களில் நடித்து பக்கத்து வீட்டுப் பெண் போன்ற தோற்றத்துடன் இருந்தவர் தான் அந்த நடிகை. அதனாலேயே அவரை ரசிகர்களுக்கு முதல் பார்வையிலேயே பிடித்துப் போனது. இத்தனைக்கும் அவர் பேரழகு நடிகை எல்லாம் கிடையாது. ஆனால் தன்னுடைய எதார்த்தமான நடிப்பின் மூலம் தனக்கான ஒரு அடையாளத்தை அவர் ஏற்படுத்திக் கொண்டார்.
இப்படி பல குடும்ப திரைப்படங்களில் நடித்த அவருக்கு சில காலங்களுக்குப் பிறகு வாய்ப்புகள் வருவது குறைய தொடங்கியது. அதனால் தான் காதலித்தவரையே திருமணம் செய்து கொண்ட அந்த நடிகை குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். ஆனால் பொறுப்பற்ற கணவனால் அவர் சொல்ல முடியாத அளவுக்கு கஷ்டங்களை சந்தித்தார்.
அதாவது பிசினஸ் செய்கிறேன் என்ற பெயரில் அவருடைய கணவர் ஏகப்பட்ட கடன் சுமைக்கு ஆளானார். அதை எல்லாம் தான் சம்பாதித்த பணத்தை வைத்து அடைத்த அந்த நடிகை பொருளாதார தேவைக்காக மீண்டும் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். ஆனால் எதிர்பார்த்த அளவுக்கு வாய்ப்புகள் எதுவும் கிடைக்கவில்லை.
இதற்கிடையில் அந்த நடிகையின் கணவனும் வேறு ஒரு பெண்ணுடன் ரகசிய தொடர்பில் இருந்திருக்கிறார். இதையெல்லாம் தெரிந்த அந்த நடிகை சம்பந்தப்பட்ட அந்த பெண்ணிடம் சென்று சண்டையிட்டு இருக்கிறார். ஆனாலும் ஒரு நாள் நடிகையின் கணவன் வீட்டில் இருக்கும் பணத்தை எல்லாம் எடுத்துக்கொண்டு தன் கள்ள காதலியுடன் கம்பி நீட்டி இருக்கிறார்.
இதனால் நொந்து போன அந்த நடிகை வறுமையின் காரணமாக கொஞ்சம் கொஞ்சமாக பலான தொழிலை செய்ய ஆரம்பித்தார். அதன் மூலம் காசு பார்த்த நடிகை பிறகு நடிப்பதை விட்டுவிட்டு இந்த தொழிலிலேயே தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். ஆனால் நடிகையின் இந்த அந்தரங்க விஷயம் ஒரு நாள் மீடியாவில் கசிந்தது. அதன் பிறகு பல பிரச்சினைகளை சந்தித்த அந்த நடிகை இப்போது இருக்கும் இடம் தெரியாமல் இருந்து வருகிறார்.