ஒரு காலத்தில் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக ரவுண்டு கட்டிக் கொண்டிருந்த பிரபல நடிகை ஒருவர், தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனரையே காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஆனால் வெகு சீக்கிரமே அந்த நடிகையின் தவறான நடவடிக்கையின் காரணமாக புகுந்த வீட்டின் கோபத்திற்கு ஆளாகி, காதல் கணவரை விவாகரத்து செய்து விட்டார்.
இருப்பினும் அந்த விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது சஸ்பென்ஸ் ஆகவே இருந்தது. ஆனால் இப்போது அந்த உண்மை வெளிவந்துள்ளது. இந்த நடிகை விவாகரத்திற்கு பிறகு தான் ஒவர் சேட்டை செய்ய ஆரம்பித்து விட்டார். இப்போது அந்த நடிகையின் விவாகரத்திற்கு என்ன காரணம் என்பது தெரிய வந்துள்ளது.
இவர் கணவருக்கு இணையாக குடிப்பழக்கம் கொண்டிருந்ததால், ஆரம்பத்தில் அவருடன் குடித்து கும்மாளம் போட்டு வந்திருக்கிறார். ஆனால் இது அவருடைய புகுந்த வீட்டிற்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை. இதனால் வீட்டில் மது அருந்தாமல் அவ்வப்போது இரவு நேர கேளிக்கை விருந்துகளில் பங்கேற்று அங்கு குடித்துவிட்டு கும்மாளம்
போட்டு இருக்கிறார்.
ஆரம்பத்தில் இதைப்பற்றி கண்டு கொள்ளாமல் இருந்த குடும்பத்தினர், ஒரு கட்டத்தில் நடிகையின் போக்கை கண்டுகொள்ளாமல் மிகுந்த மன வருத்தத்தில் இருந்துள்ளனர். காரணம் அந்த நடிகை தன்னுடைய கணவரின் நண்பருடன் குடிபோதையில் நெருக்கமாக இருந்த புகைப்படத்தை அவருடைய புருஷன் இடமே காட்டி இருக்கின்றனர் அவரின் நலம் விரும்பிகள் சிலர்.
இதை எப்படி கேட்பது என தெரியாமல் அந்த கணவர் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகினார். இதைத் தொடர்ந்து அந்த நடிகையை அழைத்து கண்டித்த போதுதான் குடும்பத்தில் பூகம்பமே வெடித்தது. ஒரு கட்டத்தில் இருவரும் சேர்ந்து வாழவே முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகு தான், இருவரும் விவாகரத்து பெற்று விட்டதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.