பொதுவாக சில நடிகைகள் பட வாய்ப்புக்காக அட்ஜெஸ்ட்மென்ட் செய்வது தற்போது சர்வ சாதாரணமாக மாறிவிட்டது. ஆனால் சினிமாவை தாண்டி பணத்தாசையால் தொழிலதிபர்கள் மற்றும் அரசியல் பிரபலங்களுடன் சில நடிகைகள் பழகி வருகிறார்கள். இதனால் பின்னாளில் மிகப்பெரிய பிரச்சனையும் சந்தித்திருக்கிறார்கள்.
அவ்வாறு பிரபல நடிகை ஒருவர் முதலில் படங்களில் நடிக்கும் போது அதிக கவர்ச்சி காட்ட சொன்னதால் பட வாய்ப்பை மறுத்துவிட்டார். அதன் பிறகு சின்னத்திரையில் காலடி எடுத்து வைத்து முக்கிய தொடர்களில் முன்னனி கதாபாத்திரங்களில் நடிக்கும் வாய்ப்பை பெற்றார். இதனாலேயே வெள்ளித்திரையில் உள்ள நடிகைகளை காட்டிலும் இவருக்கு அதிகமாக ரசிகர்கள் இருந்தனர்.
மேலும் தனது அழகையும் நடிகை மெருகேற்றிக் கொண்டார். ஆனால் ஆடம்பர வாழ்க்கை மற்றும் சீக்கிரம் பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தால் அவரது வாழ்க்கையை சீரழித்துக் கொண்டார். அதாவது தனது தொலைக்காட்சியில் உள்ள முக்கிய நபரை கைக்குள் போட்டுக் கொண்டு பல வேலைகள் செய்தார்.
அதன்பின் அவரின் சொத்துக்கள் அனைத்தையும் அபகரித்துக் கொண்டார். கடைசியில் உண்மை தெரிந்த அந்த நபர் நடிகையை தொந்தரவு செய்ய ஆரம்பித்தார். ஆகையால் அந்த ஏரியாவின் அரசியல் பெரும் புள்ளியை தன் வசப்படுத்திக் கொண்டு இந்த பிரச்சனையை ஒன்னும் இல்லாமல் ஆக்கிவிட்டார்.
அதன்பின் அந்த அரசியல் பிரபலத்தையும் ஏமாற்றிவிட்டு எம்எல்ஏ, மினிஸ்டர் என போதும் போதும் என்று சொல்லும் அளவிற்கு லிஸ்ட் பெருசாகிக்கொண்டே சென்றது. கடைசியில் இவர்கள் விட்ட சாபமோ என்னவோ தெரியவில்லை நடிகை மிகுந்த மன அழுத்தத்தில் சிக்கி தன்னையே மாய்த்துக் கொண்டார்.