சினிமாவில் பேரும் புகழும் அடைய வேண்டும் என்பதற்காக நடிகைகள் அட்ஜஸ்மென்ட் செய்வதை வாடிக்கையாக வைத்திருக்கின்றனர். ஆனால் இதில் சில நடிகைகள் திறமையால் மட்டுமே முன்னுக்கு வரவேண்டும் என்பதால் அட்ஜஸ்ட்மென்ட் வாய்ப்பை மறுத்தும் இருக்கிறார்கள். ஆனால் பணத்தாசையால் ஒரு நடிகை தனது உயிரையே விட்டிருக்கிறார்.
அதாவது ஆடம்பர வாழ்க்கை, பங்களா, கார் என சொகுசாக வாழ நினைத்திருக்கிறார். நடுத்தர குடும்பத்தில் பிறந்த அவருக்கு சின்னத்திரையில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. படிப்படியாக தனது திறமையை வளர்த்து முன்னணி இடத்திற்கு வந்தார். அதுவும் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் இவருக்கு தனி இடம் இருந்தது.
ஆனால் அவர் வாங்கும் சம்பளத்திற்கும், ஆடம்பர வாழ்க்கைக்கும் கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாமல் இருந்தது. அதாவது அரசியல் பிரபலங்கள் பலருடன் நடிகை உறவில் இருந்துள்ளார். மேலும் அவர்களிடமிருந்து சொத்தை அபகரித்திருக்கிறார் நடிகை. அந்த பிரபலம் பிரச்சனை செய்தால் வேறு ஒரு பெரிய ஆளுடன் படுக்கையை பகிர்ந்து இவரை சரிகட்டி விடுவார்.
இவ்வாறு ஒவ்வொரு பெரிய கையை வளைத்துப் போட்டு வசதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார். ஒரு கட்டத்திற்கு மேல் இதுவே நடிகைக்கு பிரச்சனை வர ஆரம்பித்தது. மேலும் நிம்மதியாக படப்பிடிப்பிலும் நடிக்க முடியாமல் திணறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் இந்த விஷயம் வெளியே கசிந்து விட்டது.
இதனால் நடிகைக்கு அவமானம் ஏற்படவே மன உளைச்சல் காரணமாக தற்கொலை செய்து கொண்டார். அதன் பிறகு இந்த விஷயம் பூதாகரமாக வெடிக்க இவரைப் பற்றிய எல்லா உண்மைகளுமே இணையத்தில் தொடங்கியது. எல்லாத்திற்கும் பணத்தாசை தான் மூல காரணமாக இருந்திருக்கிறது.