சில நடிகைகள் பணத்துக்கு ஆசைப்பட்டு கோடீஸ்வர பிரபலங்களாக பார்த்து திருமணம் செய்து கொள்வார்கள். அந்த வகையில் பல நடிகைகள் தொழிலதிபர்களை தான் திருமணம் செய்து கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் நடிகை ஒருவரின் முதல் திருமணம் தோல்வியில் முடிந்துவிட்டது.
அவருக்கு ஒரு மகனும் உள்ள நிலையில் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் போது இன்னொரு நடிகருடன் கிசுகிசுக்கப்பட்டார். இதனால் அந்த நடிகரின் மனைவி பிரளயத்தையே ஏற்படுத்தி இருந்தார். அந்த காதலை பாதியிலேயே விட்டு விட்டு புளியங்கொம்பாக ஒருவரை பிடித்திருந்தார் நடிகை.
இவர்களது திருமணம் ரசிகர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருந்தது. மூக்கும் முழியுமாக இருக்கும் நடிகை இவரை திருமணம் செய்து கொள்ள காரணம் பணம் தான் என நடிகை காது படவே பேசப்பட்டது. எதற்கும் அஞ்சாத அந்த நடிகை அவருடைய மனதை பார்த்து தான் திருமணம் செய்து கொண்டேன் என அடுக்கடுக்காக பொய்களை அவிழ்த்து விட்டு வந்தார்.
ஆனால் இப்போது தான் தெரிகிறது நடிகை மாளிகை என்று நினைத்துக் கொண்டு படுகுழியில் விழுந்திருக்கிறார். அதாவது இவரை விட கேடு கெட்டவனாக இருந்திருக்கிறார் நடிகையின் இரண்டாவது புருஷன். வெளியில் பணக்காரர் போல் பீத்திக் கொண்டிருந்த அவர் சரியான மோசடி செய்யக்கூடியவராம்.
இப்போது அவர் மீது அடுக்கடுக்கான புகார்கள் வந்து கொண்டிருக்கிறது. இதனால் பயந்து போன நடிகை நம்மிடம் ஏதாவது இந்த மோசடி புகார்கள் பாய்ந்து விடுமோ என்ற அச்சத்தில் இருக்கிறாராம். அதோடு மட்டுமல்லாமல் நல்லவர் என்று இப்படி ஏமாந்து போய் விட்டேனே என தோழிகளிடம் சொல்லி புலம்பி தீர்த்து வருகிறாராம்.