பிரபல இயக்குனர் தன்னுடைய படத்தில் எல்லாமே மிகவும் யதார்த்தமாக இருக்க வேண்டும் என்பதற்காக தத்ரூபமாக எடுக்கக் கூடியவர். அந்த வகையில் வாரிசு நடிகர் ஒருவரை தனது படத்தில் அறிமுகம் செய்து வைக்க இயக்குனர் ஆசைப்பட்டார். அதேபோல் அந்த நடிகருக்கு ஏற்றவாறு ஒரு கதையும் அமைந்தது.
மேலும் அந்த படத்தில் கதாநாயகியும் புது முகம்தான். படத்தில் ஏகப்பட்ட ரொமான்ஸ் காட்சிகளை எடுக்க இயக்குனர் முற்பட்டிருக்கிறார். ஆனால் கதாநாயகன் மற்றும் கதாநாயகி இருவருக்குமே இது அறிமுகப்படம் என்பதால் கெமிஸ்ட்ரி சுத்தமாக ஒர்க் அவுட் ஆகவில்லை. இயக்குனருக்கு எடுத்த காட்சியும் பிடிக்கவில்லையாம்.
இதனால் யோசித்து அவர் செய்த மட்டமான வேலை தற்போது அம்பலமாகி இருக்கிறது. அதாவது பஞ்சும், நெருப்பும் பக்கத்தில் இருந்தால் கண்டிப்பாக பத்திக் கொள்ளும். ஆகையால் பிரபல ஹோட்டல் ஒன்றில் ரூம் புக் செய்து உள்ளார். மேலும் ஹீரோவிடம் கதாநாயகி அந்த ரூமில் இருக்கிறார்.
நீ கதாநாயகி உடன் சந்தோஷமாக இருந்துவிட்டு வா என்று இயக்குனர் சொல்லி இருக்கிறார். இதைக் கேட்டு ஒரு கணம் ஹீரோ அதிர்ச்சி அடைந்து இருக்கிறார். ஆனாலும் இயக்குனர் பேச்சை மீறி எதுவும் செய்யக்கூடாது என்பதால் அந்த ரூமுக்கு சென்றுள்ளார். மேலும் இவர்கள் இருவரும் நெருங்கி பழகி இருக்கிறார்கள்.
அதோடு மட்டுமல்லாமல் மறுநாள் படப்பிடிப்பில் இவர்களின் நெருக்கமான காட்சிகள் படமாக்கப்பட்டு இருக்கிறது. அப்போது இருவருமே தத்ரூபமாக நடித்து அனைவருக்கும் ஆச்சரியத்தை அளித்துள்ளனர். அதன் பிறகு தான் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆக இயக்குனர் இவ்வாறு செய்துள்ளார் என்ற விஷயம் படக்குழுவுக்கு தெரிய வந்திருக்கிறது.