பிரபல இயக்குனர் ஒருவர் பொது இடத்தில் செய்த அட்டூழியம் தான் இப்போது கேலி கூத்தாக மாறி இருக்கிறது. திரை மறைவில் நடக்கும் பல கசமுசா வேலைகள் வெளியில் தெரியாத வண்ணம் நடந்து கொண்டிருக்கிறது. ஆனால் இந்த இயக்குனரோ பட்ட பகலில் தன் பிஏ-வுடன் ஜல்சா செய்திருக்கிறார்.
இதுதான் இப்போது கோடம்பாக்க டீக்கடைகளில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதெல்லாம் சினிமாவில் சாதாரணமப்பா என்று கூறினாலும் இயக்குனர் செய்த அட்டூழியம் கொஞ்சம் ஓவர் தான் என்ற ரீதியில் பலரும் வெளிப்படையாகவே கிசுகிசுக்கின்றனர்.
அதாவது அந்த இயக்குனர் தன் பிஏ-வுடன் காரில் பல சில்மிஷ வேலைகளை நடத்தி இருக்கிறார். அதிலும் இது பொதுமக்கள் கண்ணில் படும்படியாக இருந்தது தான் கேவலம். இந்த அசிங்கத்தை பார்த்த ஒரு சில கண்டும் காணாதது போல் சென்றிருக்கின்றனர். ஆனால் சில பொதுமக்கள் இதை மீடியா வரை தெரிவித்திருக்கின்றனர்.
அந்த வகையில் தற்போது இயக்குனரின் வண்டவாளம் தண்டவாளத்தில் ஏறி இருக்கிறது. சினிமாவை பொருத்தவரையில் இது போன்ற சில விஷயங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. வாய்ப்புகளுக்காக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய சொல்வது என பல விஷயங்கள் அரங்கேறி வருகிறது.
ஆனால் அவை அனைத்தும் இவ்வளவு ஓப்பனாக யாருக்கும் தெரிவது கிடையாது. அதனாலேயே இந்த விவகாரம் தற்போது பேசு பொருளாக மாறி இருக்கிறது. பொதுவெளியில் பட்ட பகலிலேயே இது போன்ற அசிங்கமாக நடந்து கொள்ளும் இயக்குனர் மறைமுகமாக இன்னும் என்னவெல்லாம் செய்வாரோ என்றும் பேசி வருகின்றனர். அந்த வகையில் இந்த விவகாரம் தான் இப்போது காட்டு தீ போல் பரவிக் கொண்டிருக்கிறது.