ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டிய கதைதான்.. மனைவியை விட்டுவிட்டு நடிகையுடன் போடும் கும்மாளம்

இயக்குனர் எடுக்கும் படங்கள் எல்லாமே வித்தியாசமான கோணத்தில் தான் இருக்கும். இந்த இயக்குனரின் படத்தில் அதிகம் அந்தரங்க காட்சிகள் இடம் பெற்று வருகிறது. ஆனால் கதைக்கு தேவை என்பதால் தான் இயக்குனர் அவ்வாறு படங்களில் காட்சி வைப்பதாக பல மேடைகளில் கூறியிருக்கிறார்.

இந்நிலையில் மிகவும் துணிச்சல் வாய்ந்த கதாபாத்திரங்களில் நடிக்கும் நடிகை ஒருவர் இந்த இயக்குனர் படத்தில் நடித்தார். அதுவும் படத்தில் மிகவும் கிளாமர் காட்சிகள் தூக்கலாக இருந்தது. இதனால் இயக்குனர் நடிகையின் அழகில் மயங்கிவிட்டார் என கோலிவுட்டில் பரபரப்பாக பேசப்பட்டது.

அவர்களின் வாய்க்கு சக்கரை போட்டது போல் ஒரு ஹோட்டலில் இயக்குனர் மற்றும் நடிகையும் லிவிங் ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்துள்ளார்கள். இந்த விஷயம் இயக்குனரின் மனைவி காதுக்குச் சென்றது. இதனால் நேரடியாக இவர்களின் உறவு பற்றி கேட்க நடிகை தான் வேண்டும் என திட்டவட்டமாக கூறிவிட்டாராம்.

ஒண்ட வந்த பிடாரி ஊர் பிடாரியை விரட்டுவது போல் மனைவியை துரத்தி விட்டுவிட்டு இயக்குனருடன் அதே வீட்டில் ஒன்றாக இருந்து வருகிறாராம் நடிகை. இப்போது விசாரித்து பார்த்தால் முதலில் நடிகை தான் இயக்குனரின் திறமையை பார்த்து அவர் மீது காதல் மயக்கத்தில் விழுந்துள்ளார்.

மேலும் நடிகையே இவ்வாறு ஒத்துக்கொண்டதால் இயக்குனரும் அவரை ஏற்றுக் கொண்டுள்ளார். இருவருமே நல்ல திறமையாக இருந்தாலும் இப்போது காதல் மயக்கத்தில் படங்களில் கவனம் செலுத்தாமல் உள்ளனர். இதனால் இவர்கள் சினிமா கேரியரே போகும் அபாயம் ஏற்பட்டுள்ளது.