48 வயதிலும் ஒண்டிக்கட்டையாக இருக்கும் நடிகை.. தோல்வியில் முடிந்த நான்கு காதல்

நடிகை அக்கட தேசத்தில் இருந்து வந்தாலும் குறுகிய காலத்திலேயே டாப் நடிகர்களுடன் ஜோடி போட்டு நடித்தார். தமிழ் சினிமாவுக்கு நடிகை வருவதற்கு முன்பே பாலிவுட்டில் பிரபல நடிகருடன் நடிகை கிசுகிசுக்கப்பட்டார். அதன் பிறகு தமிழில் கொடிகட்டி பறந்த நிலையில் நடிகர் ஒருவர் மீது காதலில் விழுந்தார்.

ஆனால் நடிகரோ ஏற்கனவே திருமணம் ஆனவர் என்பதால் தனது மனைவிக்கு தெரியாமல் நடிகையுடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்திருக்கிறார். இந்த விஷயம் மனைவிக்கு தெரிந்தவுடன் பத்ரகாளியாக மாறிவிட்டார். ஆகையால் வேறு வழியில்லாமல் நடிகையை கழட்டி விட்டுவிட்டார் நடிகர்.

அதன் பிறகு தான் நடிகைக்கு மூன்றாவது காதல் மலர்ந்தது. விளையாட்டு வீரருடன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த நிலையில் இந்த விவகாரம் செய்தியாக வெளியில் பரவியது. இதனால் தனது பெயர் மொத்தமாக டேமேஜ் ஆகிவிட்டது என நடிகையை விளையாட்டு வீரரும் பாதியிலேயே கழட்டி விட்டு விட்டார்.

இதனால் விரக்தி அடைந்த நடிகை சினிமாவில் சில காலம் தலைகாட்டாமல் இருந்தார். அதன் பிறகு தான் மீண்டும் ஒரு வயதான நடிகருடன் பழகி வந்தார். அதுவும் சில மாதங்களிலேயே முடிவுற்றது. இவ்வாறு நான்கு காதலும் தோல்வி அடைந்ததால் இனி திருமணமே வேண்டாம் என்ற முடிவுக்கு நடிகை வந்துவிட்டார்.

ஆகையால் இப்போது 48 வயதாகியும் நடிகை தனியாக இருந்து வருகிறார். ஆனாலும் அவரது குடும்பம் மற்றும் தங்கையின் குழந்தைகளுடன் நடிகை நேரத்தை செலவிட்டு வருகிறார். அதற்கு நல்லபடியாக வீட்டில் பார்த்த பையனை திருமணம் செய்து கொண்டால் அவரும் குடும்பம், குட்டி என சந்தோஷமாக வாழ்ந்து இருப்பார்.

arun

Arun

அருண் – சினிமா மீடியா துறையில் 10 வருட அனுபவம் கொண்ட Content Writer. தமிழ் சினிமா, இந்திய சினிமா, OTT வெளியீடுகள், பாடல்கள், ரசிகர் நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளை எழுதி வருகிறார். வாசகர்களுக்கு சுவாரஸ்யமாகவும் நம்பகமாகவும் தகவல்களை வழங்குவது இவரின் சிறப்பு.

View all posts →