டீ குடிக்கிற கேப்புல நடிகைகளுடன் உல்லாசமாக இருந்த பிரபலம்.. சாகும் வரை இளமையுடன் இருந்த ரகசியம்

சினிமாவில் நாம் எவ்வளவோ காதல் காட்சிகளை பார்த்திருப்போம். அந்த காதல் காட்சியில் நடிப்பதற்கு என்றே சில நடிகர்களும் இருப்பார்கள். இப்படி தமிழ் திரையுலகில் காதல் மன்னனாக வலம் வந்தவர் தான் அந்த நடிகர்.

சினிமாவில் மட்டும் அல்லாமல் நிஜ வாழ்விலும் அவருடைய காதல் லீலைகள் ஏராளமாக இருக்கிறது. சிலருக்கு புகழ், பணம் மீது போதை எல்லாம் இருக்கும். ஆனால் இந்த நடிகருக்கு பெண்கள் மீதான போதையும், மோகமும் அதிகமாக இருந்திருக்கிறது. அந்த மோகம் அவருடைய தள்ளாத வயதிலும் தொடர்ந்து இருக்கிறது என்பதுதான் ஆச்சரியம்.

நடிகர் சினிமாவில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுது படப்பிடிப்பு எங்கு நடந்தாலும் அந்த ஊரில் இருக்கும் அவருடைய ரசிகைகளின் வீட்டுக்குச் சென்று விடுவாராம். அதிலும் பணக்கார பெண்களை குறி வைப்பது தான் அவருடைய வேலையே. அப்படி அவர் அந்தப் பெண்களின் வீட்டுக்கு சென்று போடாத ஆட்டம் அல்ல.

அதுமட்டுமல்லாமல் டீ சாப்பிடும் நேரம், மதிய உணவு, இரவு உணவு என்று இப்படி எந்த நேரத்திலும் அவருடன் பெண்கள் கண்டிப்பாக இருந்தே ஆக வேண்டும். அதில் சில நடிகைகளும் அடக்கம். சதா சர்வகாலமும் அவர் பெண்களுடன் தான் ஜாலியாக பொழுதை கழிப்பாராம்.

அப்படி இவர் சந்தோஷமாக இருக்கும் பெண்கள் என்ன கேட்டாலும் அதை உடனே செய்து விடுவாராம். மனுஷன் தள்ளாத வயதில் கூட ஒரு இளம் பெண்ணை திருமணம் செய்து கொண்டார் என்ற ஒரு தகவலும் அப்போது பரபரப்பை கிளப்பியது.

இப்படி பெண் பித்தனாக இருந்த அவர் சாகும்வரை பெண்களுடன் மிகவும் ஜாலியாக பொழுதை கழித்து விட்டு போய்விட்டார். ஆனால் சாகும் வரையிலும் நடிகர் மிகவும் இளமையுடன் இருந்திருக்கிறார் என்பது தான் அதிசயமான ஒன்று.

vijay-founder-of-cinemapettai

Vijay

விஜய்- Cinemapettai நிறுவனர். 13 ஆண்டுகள் தமிழ் சினிமா செய்தி ஆசிரியர், டிஜிட்டல் மார்கெட்டிங் மற்றும் கன்டெண்ட் ஸ்ட்ராட்டஜியில் அனுபவம் கொண்டவர்.

View all posts →