ஓவரா சீன் போட்டு சோசியல் மீடியாவில் அலப்பறை கொடுத்து வந்த நடிகை இப்போது அழுது ஒப்பாரி வைத்துக் கொண்டிருக்கிறார். பணக்காரர் ஒருவரை திருமணம் செய்து கொண்ட அவரை பலரும் புளியங்கொம்பாக பிடித்து விட்டாரே என்று வெளிப்படையாகவே பேசினார்கள்.
ஏற்கனவே நடிகை ஒரு பணத்தாசை பிடித்தவர் என்று சொல்லப்பட்ட நிலையில் இந்த திருமணமே அதுக்காகத்தான் என்று ஒரு பிரபலம் ஆணித்தனமாக கூறினார். ஆனால் நடிகையோ என்னுடைய காதல் தான் காரணம் என்று மறுப்பு தெரிவித்தார்.
அதை தொடர்ந்து சமூக வலைத்தள பக்கங்களிலும் இவர் தன் கணவர் பற்றி ஓவராக அளந்து விட்டுக் கொண்டிருந்தார். ஆனால் இப்போது நினைச்சது ஒன்னு நடந்தது ஒன்னு என்ற கதையாக நடிகையின் நிலை மாறி இருக்கிறது.
ஏற்கனவே அவருடைய கணவர் மோசடி பேர்வழி என்று அரசல் புரசலாக பேசப்பட்டது. தற்போது அந்த விஷயம் பகிரங்கமாகி இருப்பது நடிகையின் சந்தோஷத்தை ஆட்டம் காண வைத்துள்ளது. இப்படி நம்ப வச்சு கழுத்தறுத்துட்டாரே என அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் இப்போது கதறிக் கொண்டிருக்கிறாராம்.
ஆனால் கணவரின் இந்த தில்லாலங்கடி வேலை நடிகைக்கு தெரியாமலா இருந்திருக்கும். பணத்தை பார்த்ததும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிவிட்டு இப்ப அழுது என்ன பிரயோஜனம் என்று பலரும் நடிகையை விமர்சித்து வருகின்றனர்.