சினிமாவில் நடிக்கும் ஹீரோ, ஹீரோயின்கள் நிஜ வாழ்வில் திருமணம் செய்து கொள்வது ஒன்றும் புதிதல்ல. ஆனால் ரொமான்ஸ் காட்சியில் நடித்துக் கொண்டிருக்கும் பொழுதே நடிகரிடம் மயங்கிய ஒரு நடிகையும் இருக்கிறார். அதன் விளைவாக அவர் தன் கணவரையும் விவாகரத்து செய்து இருக்கிறார்.
இந்த காலத்தில் தான் நடிகைகள் கட்டுப்பாடு இல்லாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால் அந்த காலத்தில் கூட இப்படிப்பட்ட கதைகள் ஏராளமாக நடந்திருக்கிறது. அப்போதைய காலகட்டத்தில் ஓரளவுக்கு பிரபலமாக இருந்தவர்தான் அந்த நடிகை. அக்கட தேசத்தில் ஹீரோவுடன் அவர் ஒரு படத்தில் நடிக்கும் போது கடற்கரையில் ரொமான்ஸ் காட்சி ஒன்று படமாக்கப்பட்டு இருக்கிறது.
அப்போது ஹீரோ, ஹீரோயின் இருவரும் கடல் நீரில் விளையாடியபடி ரொமான்ஸ் செய்ய வேண்டும். அப்போது ஈர உடையில் இருந்த இருவரும் கட்டிப் பிடிக்கும் படி ஒரு சீன் இருந்திருக்கிறது. காட்சி தத்ரூபமாக வரவேண்டும் என்பதற்காக இருவரும் கொஞ்சம் நெருக்கமாக நடித்திருக்கிறார்கள்.
ஆனால் அந்த நெருக்கம் நடிகைக்கு அந்த நடிகரின் மேல் ஒரு மயக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நடிகரும் அந்த நடிகையின் அழகியல் மயங்கி போய் இருந்திருக்கிறார். இத்தனைக்கும் அந்த நடிகை ஏற்கனவே திருமணமானவர். ஆனாலும் நடிகருடன் வாழ விரும்பிய அந்த நடிகை தன் கணவரை விவாகரத்து செய்திருக்கிறார். அதன் பிறகு அந்த பிரபல நடிகரை திருமணம் செய்து கொண்ட நடிகை இறுதிவரை அவருடன் தன் வாழ்வை வாழ்ந்து இருக்கிறார்.
அந்த நடிகருக்கும் ஏற்கனவே திருமணம் ஆகி மனைவி மகன் எல்லாம் இருந்திருக்கின்றனர். ஆனாலும் அவர் நடிகையை இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து இருக்கிறார். அந்த நடிகரின் முதல் மனைவியின் மகன் தற்போது அக்கட தேசத்தில் பிரபல நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். பல திரைப்படங்களில் நடித்தாலும் அவர் எப்போதுமே ஒரே எக்ஸ்ப்ரஷன் தான் கொடுப்பார். ஆனாலும் அவருக்கு இப்போது வரை ரசிகர்கள் கூட்டம் அதிகமாக இருக்கிறது.