Gossip: இப்போது எல்லோருக்கும் ஹீரோ ஆசை வந்துவிட்டது. இயக்குனர்கள் கூட டைரக்ஷன் வேலையை விட்டுவிட்டு ஹீரோ வில்லன் என நடிக்க தொடங்கி விட்டனர்.
அப்படித்தான் அந்த காமெடி நடிகரும் ஹீரோவாக மாறி இருக்கிறார். அவருக்கு நல்ல ஆதரவும் இருக்கிறது. அதனாலேயே அடுத்தடுத்த படங்களை கமிட் செய்து வருகிறார்.
ஆனால் முன்னணியில் இருக்கும் நடிகைகள் யாரும் அவருடன் ஜோடி போட தயாராக இல்லை. அதனால் வளர்ந்து வரும் நடிகைகள் புது முக ஹீரோயின்கள் என நடிகர் செலக்ட் செய்து வருகிறார்.
சாமர்த்தியமாக பணம் பறித்த நடிகை
ஆனாலும் தெரிந்த முகமாக இருக்கும் நடிகை காமெடி நடிகருக்கு ஜோடியாக நடிக்க சம்மதித்தார். இதனால் பூரித்து போன நடிகரும் அவருடன் நெருக்கமான நட்புடன் இருந்துள்ளார்.
படம் முடிந்ததும் நடிகை அவருடைய வேலையை பார்க்க சென்று விட்டார். ஆனால் நடிகர் தான் இப்போது திருடனுக்கு தேள் கொட்டிய நிலையில் இருக்கிறாராம்.
என்னவென்றால் நெருக்கமாக பழகுவது போல் நடிகை இந்த நடிகரிடம் இருந்து சில கோடிகளை சாமர்த்தியமாக லவட்டி இருக்கிறார். இதில் கணிசமாக கிடைத்த சம்பளம் வேறு தனி ட்ராக்.
கிடைத்தவரை லாபம் என்று நடிகை சென்றுவிட்டார். ஆனால் நடிகர் வீட்டுக்கு தெரிந்தால் என்ன நடக்குமோ என பதட்டத்தில் இருக்கிறாராம்.