பள்ளிப் பருவத்திலேயே 4வது மனைவியான நடிகை.. திருமண வாழ்க்கையே சூனியமான சம்பவம்

நடிகை சினிமாவில் குழந்தை நட்சத்திரமாகவே அறிமுகமான நிலையில் டாப் நடிகர்கள் பலரின் படத்தில் நடித்திருக்கிறார். அதன் பிறகு ஒரு 16 வயதில் கதாநாயகியாக நடிக்க தொடங்கினார். அப்போது ஒரு சில படங்களில் நடித்துக் கொண்டிருக்கும் போது பிரபலம் ஒருவர் மீது காதல் வந்துள்ளது.

அதுவும் அவர் நடிகையிடம் ஆசை வார்த்தைகளை பேசி தன்னுடைய வழிக்கு கொண்டு வந்திருக்கிறார். அப்போது நடிகைக்கு 16 வயது என்பதால் அவரும் காதல் வலையில் விழுந்துவிட்டார். இதனால் உடனடியாகவே நடிகை மனம் மாறி விடுவதற்குள் பிரபலம் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று கல்யாணத்தையும் முடித்து விட்டார்.

ஆனால் வீட்டுக்கு செல்லும்போது தான் நடிகைக்கு பேர் அதிர்ச்சி காத்திருந்தது. அதாவது ஏற்கனவே இந்த பிரபலத்திற்கு மூன்று முறை திருமணம் ஆகி இருக்கிறதாம். அதை மறைத்து தான் தன்னை திருமணம் செய்து கொண்டிருக்கிறார் என்ற விஷயம் தெரிந்ததால் அதிர்ச்சியாகி இருக்கிறார்.

மேலும் அதன் பிறகு பல பிரச்சனைகளை சந்தித்து வந்துள்ளாராம். பருவத்தில் தான் எடுத்த தவறான முடிவால் வாழ்க்கையே நரகம் ஆகிவிட்டதாக நடிகை கதறி இருக்கிறார். அதோடு மட்டுமல்லாமல் பிரபலத்திற்கு தன்னைவிட மூன்று மடங்கு வயது அதிகம் என்பதால் திருமணம் ஆன சில வருடங்களிலேயே இறந்து விட்டார்.

ஆனால் நடிகையோ வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ளாமல் தற்போது வரை தனிமையில் தான் வாழ்ந்து வருகிறார். ஆனால் ஒரே ஒரு திருமணத்தால் தனது வாழ்க்கை இப்படி சூனியமாகும் என்று அந்த வயதில் அவர் நினைத்து கூட பார்த்திருக்க மாட்டார். இப்போது சின்னத்திரை தொடர்களில் நடிகை நடித்து வருகிறார்.