இறந்த பின்பும் இரையாக்கப்பட்ட நடிகை.. பீதியை கிளப்பிய தோழி 

90களில் காந்த  கண்ணழகியாக தன்னுடைய வசீகர சிரிப்பால் இளசுகளை கட்டிப்போட்டிருந்தார் அந்த நடிகை. இவர் குறுகிய காலத்திலேயே 400 படங்களுக்கு மேல் நடித்து புகழ்பெற்றவர். இவருடைய டஸ்கி நிறம், சொக்க வைக்கும் கண்கள், கொஞ்சி பேசும் பேச்சு போன்றவை இவரை புகழின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.  

முதலில் குணச்சித்திர கேரக்டரில் நடித்த இந்த நடிகை, அதன் பின்பு ஐட்டம் பாடல்களுக்கு ஆடி இளசுக்குகளை திணறடித்தார். இந்த நடிகையின் பாட்டு இருந்தால் அந்த படம் ஹிட் என்ற நிலைமையும் இருந்தது. அன்றைய காலகட்டத்தில் திடீரென்று அந்த நடிகை மர்மமான முறையில் தற்கொலை செய்து கொண்டார்.

இவருடைய தனிப்பட்ட வாழ்க்கை மர்மங்கள் நிறைந்ததாகவே இருந்தது. அந்த நடிகை இறந்த பின்பு அவருடைய தோழி ஒருவர் பீதியை கிளப்பும் அளவுக்கு ஒரு விஷயத்தை சொல்லியிருக்கிறார். டான்ஸ் மாஸ்டராக இருக்கக்கூடிய அந்த நடிகையின் தோழி, கவர்ச்சி நடிகை இறந்த பின்பு அவரது உடலை பார்த்து சென்றிருக்கிறார்.

பிணவறையில் உடை இல்லாமல் மிக மோசமான நிலையில்  போட்டு இருந்தனர். அந்த நடிகை இறந்த பின்பும் உயிர் இல்லாத அவருடைய உடலை ஏதோ செய்து விட்டார்கள். பிணவறையில் வைத்தே அந்த நடிகையின் உடலை நாசம் செய்திருக்கின்றனர். இறந்த பின்பும் மோசமான வெறியர்களுக்கு இரை ஆக்கப்பட்டார்.

நீண்ட நாட்கள் இந்த கொடுமை நடந்திருக்கிறது. இதை தற்போது அந்த டான்ஸ் மாஸ்டர் ஆன தோழி வெளிப்படுத்தியது பலரையும் ஆச்சரியப்படுத்துகிறது. ஆனால் அந்த நடிகையின் வாழ்க்கையில் என்ன நடந்தது என்ற உண்மை அவருடன் சேர்ந்தே மறைந்து விட்டது என்பது தான் சோகம்.