சதா நேரமும் போதையிலேயே இருந்த நடிகை.. அந்தரங்க விஷயத்திற்கு தடை போட்டதால் நடந்த விவாகரத்து

பிரபல நடிகை ஒருவர் முதல் படத்திலேயே தன்னுடைய நடிப்பு திறமையை வெளிப்படுத்தி அடுத்தடுத்த வாய்ப்புகளை பெற்றார். முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்த அவர் தன்னை அறிமுகப்படுத்திய இயக்குனருடன் அதிக நட்பில் இருந்தார்.

நாளடைவில் இந்த நெருக்கம் காதலாக மாறி திருமணம் வரை சென்றது. மார்க்கெட் உச்சத்தில் இருக்கும்போதே நடிகை திடீரென குடும்ப வாழ்க்கைக்கு சென்றது பலருக்கும் அதிர்ச்சி தான். அது மட்டுமல்லாமல் அந்த இயக்குனர் ஒரு மாதிரி, எப்படி இவர்கள் இருவரும் ஒன்று சேர்ந்தார்கள் என்ற சந்தேகமும் எழாமல் இல்லை.

ஆனால் சில வருடங்களிலேயே நடிகை இயக்குனரை விவாகரத்து செய்தார். இதற்கு பல காரணங்கள் சொல்லப்பட்டாலும் இப்போது கிளம்பி இருக்கும் விஷயம்தான் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. அதாவது திருமணத்திற்கு பிறகு நடிகை நடிக்க கூடாது என்று புகுந்த வீட்டில் உத்தரவு போட்டு இருக்கின்றனர்.

இயக்குனரும் மனைவிக்கு சாதகமாக இல்லாததால் நொந்து போன நடிகை சதா நேரமும் போதை மயக்கத்திலே இருந்திருக்கிறார். ஏற்கனவே நடிகைக்கு சிகரெட், மது பழக்கம் இருப்பது ஊருக்கே தெரியும். நடிக்க கூடாது என்று சொன்ன கோபத்தால் குடும்பத்தினரை பழிவாங்க நடிகை இப்படி ஒரு வேலையை பார்த்திருக்கிறார்.

அது மட்டுமல்லாமல் அந்தரங்க விஷயத்திற்கும் அவர் தடை போட்டு விட்டாராம். இதனால் நொந்து போன இயக்குனர் ஒரு நடிகையுடன் தொடர்பில் இருந்திருக்கிறார். இது கொஞ்சம் கொஞ்சமாக பஞ்சாயத்தாக மாறியதால் தான் இந்த விவாகரத்து நடந்திருக்கிறது. பல வருடங்களுக்கு பிறகு வெளியான இந்த விவகாரம் கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.