பெரும்புள்ளியின் ஆதரவால் தப்பிக்கும் நடிகை.. கணவன் கொடுத்த வாக்குமூலம்

Gossip: ஓரிரு படங்களில் தலைகாட்டி இருக்கும் அந்த நடிகை இப்போது நடிப்பை விட்டு விட்டு சொந்த தொழிலில் பிஸியாக இருக்கிறார். சோசியல் மீடியாவிலும் அவர் வெகு பிரபலம்.

சமீப காலமாகவே இவர் பற்றிய சர்ச்சை செய்திகள் பரப்பரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் நடிகையின் கணவன் செய்த ஒரு லீலை சோசியல் மீடியாவில் ட்ரெண்ட் ஆனது.

அதை அடுத்து நடிகை தன் கணவனை பிரிந்து வசித்து வருகிறார். தற்போது நடிகையின் கணவர் பல அதிர்ச்சியான தகவல்களை சொல்லி மீண்டும் பரப்பரப்பை கிளப்பி இருக்கிறார்.

கணவன் கொடுத்த வாக்குமூலம்

ஆரம்பத்தில் இருந்தே நடிகை கொஞ்சம் அப்படி இப்படித்தான். நாங்கள் காதலிக்கும் போது பட வாய்ப்புக்காக அவர் சில வேலைகளை செய்திருக்கிறார். அது எனக்கும் தெரியும்.

ஆனாலும் நான் அமைதியாக இருக்கிறேன். இப்போது நடந்த பிரச்சனையில் கூட மனைவிதான் மூல காரணமாக இருக்கிறார். ஆனால் அவர் சட்ட ரீதியான பிரச்சனைகளில் சிக்கவில்லை.

அதற்கு முக்கிய காரணம் அந்த பெரும்புள்ளி தான். அவருடன் இவருக்கு நெருங்கிய பழக்கம் இருக்கிறது. அதன் காரணமாகவே மனைவி தப்பித்துக் கொண்டிருக்கிறார் என கணவர் கூறியிருக்கிறார்.

ஏற்கனவே இவர்களுடைய பஞ்சாயத்து ஊரே பேசும் அளவிற்கு இருக்கிறது. இதில் கணவனே அந்த நடிகையை பற்றி இப்படியெல்லாம் பேசி இருப்பது எரியிற நெருப்பில் எண்ணெய் ஊற்றிய கதையாக மாறி இருக்கிறது.