திடீரென இந்த வாரிசு நடிகை இப்படி மாறிட்டாரே என பலரும் வேதனைப்படும் நிலையில் தான் அவர் இருக்கிறார். ஆரம்பத்தில் சுறுசுறுப்பாக தன்னுடைய வேலையை பார்த்து வந்த இந்த நடிகை இப்போது ஓவர் மன அழுத்தத்தில் இருக்கிறாராம்.
ஏற்கனவே உடல் நல பிரச்சனை, தனிப்பட்ட வாழ்வில் சிக்கல் என துவண்டு போயிருந்த நடிகை இப்போது சைக்கோ தனமாக நடந்து கொள்கிறாராம். இப்பொழுதுதான் நடிகை ஒன்றிரண்டு படங்களில் தலைகாட்டி கொண்டிருக்கிறார்.
ஆனால் கடந்த சில வருடங்களாகவே நடிகைக்கு எந்த பட வாய்ப்புகளும் இல்லாமல் இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நடிகை சூட்டிங் ஸ்பாட்டில் கூட முரட்டுத்தனமாக தான் நடந்து கொள்வாராம். இதனாலேயே பல இயக்குனர்களும் இவரை வைத்து படம் எடுக்க தயங்கி இருக்கிறார்கள்.
தற்போது ஓரளவுக்கு மனப்பிரச்சனையிலிருந்து விடுபட்டுள்ள நடிகை படங்களில் கவனம் செலுத்த ஆரம்பித்துள்ளார். ஆனாலும் வீணா போன அந்த போதை பழக்கம் அவரை சில நேரங்களில் அரக்கத் தனமாக மாற்றி விடுகிறதாம். இதனால் அப்பா நடிகர் தான் பெரும் கவலையில் இருக்கிறார்.
மகளை சரி செய்ய எவ்வளவோ முயன்றும் அவரால் அது முடியாமல் போயிருக்கிறது. தன் போக்கில் இருக்கும் நடிகை தன் அப்பாவிடம் கூட சமீபத்தில் காச் மூச் என்று கத்தி முரட்டுத்தனமாக சண்டை போட்டு இருக்கிறார். இதுதான் இப்போது காத்து வாக்கில் கிசுகிசுக்கப்பட்டு வருகிறது.