சிறுவயதிலிருந்தே நடித்து வருபவர் தான் இந்த நடிகை. தற்போது 40 வயதை கடந்த நிலையிலும் இளம் பெண் போல் சிக்கென்று இருக்கும் இவர் சர்ச்சைகளுக்கு பஞ்சம் இல்லாதவர். ஆனால் இதை அவர் ஒருபோதும் கண்டு கொண்டது கிடையாது.
பல வருடங்களாக திருமணம் செய்து கொள்ளாமல் பப், பார்ட்டி என்று இஷ்டத்திற்கு வாழ்ந்து வந்த இவர் சில வருடங்களுக்கு முன்புதான் கோலாகலமாக திருமணம் செய்து கொண்டார். ஊர் மெச்ச கல்யாணம் செய்து கொண்ட இவர் வாக்கப்பட்டது ஒரு ஆச்சாரமான குடும்பத்தில் தான்.
ஆனால் அதை கொஞ்சம் கூட மதிக்காமல் இவர் திருமணத்திற்கு பிறகும் பிரபல நடிகர் ஒருவருடன் நட்பில் இருந்திருக்கிறார். அது மட்டுமல்லாமல் இவர்கள் இருவரும் குடியும் கூத்துமாக இருந்த விஷயம் மீடியாவில் கூட சத்தம் இல்லாமல் கிசுகிசுக்கப்பட்டது.
இது ஒரு சூழலில் போட்டோ ஆதாரமாக வெளியில் வந்ததால் நடிகையின் கணவருடைய குடும்பம் மொத்தமாக அதிர்ந்து போயிருக்கிறது. அதைத்தொடர்ந்து கணவன் நடிகையை கட்டுப்படுத்த முயன்று இருக்கிறார். ஆனால் இவரோ என் வாழ்க்கை என் இஷ்டம் என்று அவரை தூக்கி போட்டுவிட்டு விவாகரத்து நோட்டீஸ் அனுப்பி விட்டார்.
அவருடைய கணவரும் மானத்திற்கு பயந்து இவரை விவாகரத்து செய்தார். இப்படியாக ஆச்சாரமான குடும்பத்தில் வாக்கப்பட்டும் அபச்சாரமாக வாழ்ந்த இந்த நடிகை இப்போது தனிமையில் இனிமை கண்டு கொண்டிருக்கிறார். கேட்பதற்கு ஆள் இல்லாத காரணத்தால் தற்போது அவருடைய லூட்டி இன்னும் அதிகமாகி விட்டதாம்.